01/04/2023
கத்தார் வாழ் கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், பொது கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை (31/03/2023) கத்தார் ஸ்டபர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வை அப்துல்லா ஷபி முகமது பாஹிம் கிராத் ஓதி ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து கத்தார் கிளையின் தலைவர் பைரூஸ் தலைமை உரை நிகழ்த்தினார்.
பின்னர் பொறியாளர் நயீமுதீன் ரமலான் சிந்தனையை இளைஞர்களுக்கு வழங்கினார்.
அத்துடன் இப்தார் நிகழ்வு முடிந்த பின்னர் 2023ஆம் வருடத்திற்க்கான புதிய நிர்வாக தெரிவும் நடைபெற்றது. இதன்போது மொஹமட் பாயிஸ் ஆதம்பாவா புதிய தலைவராகவும், சர்ஜூன் புதிய செயலாளராகவும், எம்.எல்.எம் ரௌசுல் இலாஹி பொருளாளராகவும், உப தலைவராக ஏ.எம்.எம். சினான், உதவிச் செயலாளராக எம்.எம்.தில்ஷான், உதவிப் பொருளாளராக ஏ.எம்.எம்.பரஸாத் இஹ்ஸான், ஊடக செயலாளராக அஸ்வர் ரிஸ்வி ஆகியோர் ஏக மணதாக தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் ஏ.ஆர்.எம்.ரபீஸ், எம்.எச்.எம்.சர்ஜூன், ஏ.எச்.எம்.ஜாஃப்ரான்,எம்.எப்.எம் பிர்தௌஸ், ஏ.டபிள்யூ. அன்வர், ஏ.எம்.பாஹிம், எம்.சி.எம்.ரியால், ஜே.எம்.பாசித் ஆகியோர் குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் ஆலோசகராக பொறியியலாளர் எஸ்.நயீமுதீன், Dr. எம்.ரிஸான் ஜெமீல், ஃபிரோஸ், ஆப்தீன், பொறியியலாளர் மஃபீல் ஆகியோரும் நியமிக்கப்பட்டடுள்ளனர்.