18/05/2025
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வடுசுமந்த கல்முனை இளைஞர்கள்
இன்று மே 18.
2009 ஆம் ஆண்டு இதே நாளில், முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினம் சந்தித்த பேரவலத்தின் கசப்பான நினைவுகை நினைவு கூறும் வைபவம் இன்று கல்முனை இளைஞர் சேனை ஏற்ப்பாட்டில் கல்முனை நகர மத்தியில் அமைதியான முறையில் இடம்பெற்றது இதில் தமிழுணர்வுமிக்க் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
அந்த இறுதி நாட்களில், உணவுக்கும் நீருக்கும் வழியின்றி, அடிப்படை வசதிகள்கூட அற்று, குண்டுகளின் சத்தத்திற்கும் மரண ஓலங்களுக்கும் மத்தியில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்களை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.குழந்தைகள், பெண்கள், முதியோர் எனப் பாராது நடந்த கோரத் தாண்டவம், மனித மனங்களை உலுக்கும் ஒரு சோக அத்தியாயம். உயிர் பிழைத்தவர்கள் இன்றும் அந்தத் தழும்புகளுடனும், இழந்த உறவுகளின் நினைவுகளுடனும் வாழ்கின்ற எம்மக்களின் சோகத்தில் பங்குதாரர் ஆகி எம் இன உணர்வை அடுத்த தலைமுறக்கும் எடுத்து செல்ல வேண்டி உள்ளது.
முள்ளிவாய்க்காலில் சிந்திய இரத்தத்திற்கும், இழந்த உயிர்களுக்கும், சிதைந்த கனவுகளுக்கும் நீதி கிடைக்கும் வரை, தமிழ் மக்களின் துயரம் முழுமையாகத் தீராது.
அந்த மண்ணில் புதையுண்ட நினைவுகளுக்கும் என்றுமே எம் மனதில் இடங்கொண்ட அந்த உயிர்களுக்கும் எமது அஞ்சலியை செலுத்துவோம்
#மே18 #முள்ளிவாய்க்கால் #தமிழினம் #நீதி #இலங்கை