Federation of Polonnaruwa district Mosques and NGOs

Federation of Polonnaruwa district Mosques and NGOs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Federation of Polonnaruwa district Mosques and NGOs, Nonprofit Organization, Town Jumma Masjid, Kaduruwela.

பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயற்பாடுகள் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகள் இத்தளத்தின் ஊடாக பகிரப்படும்.
அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!

இன்று நடைபெற்ற பொலன்னறுவை பைத்துஸ் ஸக்காதின் ஸக்காத் விநியோக நிகழ்வு.ஸக்காத் கமிட்டி மற்றும் அனைத்து பள்ளிவாயல்கள், பிரா...
25/04/2026

இன்று நடைபெற்ற பொலன்னறுவை பைத்துஸ் ஸக்காதின் ஸக்காத் விநியோக நிகழ்வு.

ஸக்காத் கமிட்டி மற்றும் அனைத்து பள்ளிவாயல்கள், பிராந்திய ஸக்காத் கமிட்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

08/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ


பொலன்னருவை மாவட்ட காதி நீதிபதி அவர்களின் அறிவித்தல்
------------------------------------------------------------------------------------

தங்களது வழக்குகள் சம்பந்தமாக பின்வரும் நடைமுறைகளை கையாளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

1. ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்குகள் யாவும் 2026-05-15 திகதிக்கு பின்னர் வழக்குகள் நடைபெறும் தினங்கள் சம்பந்தமான அறிவித்தல்கள் வழங்கப்படும்.

2. ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட கொடுப்பணவுகளை செலுத்த இருப்பவர்கள் உரியவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பில் இட்டு பற்றுச்சீட்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

3. ஏனைய தகவல்களுக்கு 0773444700 என்ற இலக்கத்துக்கு (whatsapp வாட்ஸாப்ப்) தகவல்களை பதிவிடுக.

4.வழக்குகள் சம்பந்தமாக பேசுவதற்கு தேவைப்படின் 0773444700. 0759444700, என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு நேர ஒதுக்கீடு பெற்று காரியாலத்துக்கு வருகை தரவும்.

இப்படிக்கு,

NPM.இப்ராஹிம்(Quazi)
காதி நீதிபதி,
காதி நீதிமன்றம்,
பொலன்னறுவை.
2026-04-08

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக...
31/03/2026

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும் அர்ப்பணிப்பும் மூலம் எண்ணற்ற திறமையான மருத்துவர்களை உருவாக்கிய பெருமைக்குரிய கல்வியாளர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது.

அன்னார் தமது வாழ்நாளை முழுமையாக மனிதகுல நலனுக்காக அர்ப்பணித்த அரிய மருத்துவ அறிஞர். இலங்கையின் மருத்துவத் துறையில் அவர் பதித்த தடங்கள் என்றும் அழியாதவை. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உயிர் நம்பிக்கையை அளித்ததோடு, பல தலைமுறைகள் தழுவி நிலைக்கும் மருத்துவப் பண்பாட்டை உருவாக்கியவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அவரின் இழப்பானது முழு நாட்டின் மருத்துவ சமூகத்திற்கும ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

வல்லவன் அல்லாஹ் கண்மணி நாயகத்தின் பொருட்டால் ஜன்னத்துல் பிர்தௌஸில் உயரிய இடத்தினை வழங்குவானாக!

அவரின் இழப்பினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆறுதலையும் மன தைரியத்தையும் வழங்குவானாக...!

ஆமீன்

பொலன்னறுவை மாவட்ட காதி நீதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற அதிபர் மற்றும் பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்க...
27/03/2026

பொலன்னறுவை மாவட்ட காதி நீதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற அதிபர் மற்றும் பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் NPM இப்றாஹீம் சேர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இன்ஷா அல்லாஹ் உங்களின் சேவைக் காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்குமென்று நம்புகிறோம்.

காதி நீதிமன்றம் சம்மந்தமாக மக்களிடையே இருக்கும் ஒரு அதிருப்தி நிலைக்கு உங்களின் நியமனம் ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களின் நேர்மையான சேவைக்கு எங்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு....அல் ஹம்துலில்லாஹ் வழமை போன்று இம்முறையும் கண்டியார் குடும்பத்தினால் வழங்...
14/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு....

அல் ஹம்துலில்லாஹ் வழமை போன்று இம்முறையும் கண்டியார் குடும்பத்தினால் வழங்கப்படுகின்ற பொலன்னறுவை மாவட்டத்தில் பள்ளிவாயில்களிலே இமாம்களாக, முஅத்தின்மார்களாக, சிற்றூழியர்களாக கடமை புரிகின்ற அனைவருக்குமான ரமழான் நன்கொடை இம்முறையும் சிறப்பாக வழங்கப்பட்டது... இதனை பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் நடாத்திவருவது அனைவரும் அறிந்த விடயமே... அல்ஹம்துலில்லாஹ்!

பொலன்னறுவை மாவட்டத்தில் கடமை புரிகின்ற 109 இமாம்கள் முஅத்தீன் மார்களுக்கு ரூ. 5000/- வீதமும் சிற்றூழியர்களாக கடமை புரிகின்ற 25 சிற்றூழியர்களுக்கு ரூ. 3500/- வீதமும் நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையினை முழுவதுமாக கண்டியார் குடும்பமே வழங்கி இருந்தது என்பது சிறப்பம்சமாகும்.

பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளி வாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஸாக்கமுல்லாஹு ஹைரன் ஜஸா...!

வல்லவன் அல்லாஹ் கண்மணி நாயகத்தின் பொருட்டால் கண்டியார் குடும்பத்திற்கு நல்லருள்புரிவானாக!

அவர்களின் ஆயுளிலும் பொருளாதாரத்திலும் பறகத் செய்வானாக!

ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்.

05/03/2026

கதுறுவெல டவுன் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்திடம் எமது பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யா, பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், பைத்துஸ்ஸக்காத் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு இணங்க கடந்த டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்த 25 வியாபாரிகளுக்கு மீண்டும் அவர்களின் தொழிலை ஆரம்பிக்க பண உதவி வழங்கப்பட்டது.

அல் ஹம்துலில்லாஹ்... ஜஸாக்கமுல்லாஹு ஹைரன்.

05/03/2026
பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்டதில் இருக்கின்ற வலது ...
04/03/2026

பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்டதில் இருக்கின்ற வலது குறைந்தோருக்கான கொடுப்பணவு வருடாந்தம் வழங்கப்படுவது வழக்கம்.

அதனையொட்டி இம்முறையும் அந்த கொடுப்பணவு பங்குரானை, அக்பர்புரம், அஹமட்புரம், பள்ளித்திடலில் அடையாளம்காணப்பட்ட அங்கவீனர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்மேளனத்தலைவர் அல் ஹாஜ் SAA சமட் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது. இதனை பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் மெதிரிகிரிய பகுதி உப தலைவர் முஜாஹிதீன் மௌலவி அவர்களிடமும் லங்காபுர ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி-அப்துல் லத்தீப் முஅய்யதி மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக சுங்காவில ஜாமியுல் பலாஹ் மகல்லாவில் அடையாளம் காணப்பட்ட அங்கவீனர்களுக்கான கொடுப்பனவுகளை சம்மேளன பிரதிநிதி மௌலவி இர்ஷாத்-நஹ்ஜி அவர்களிடமும், சுங்காவில முபீன் ஜும்மா பள்ளிவாயல் மகல்லாவிலுள்ள அங்கவீனர்களுக்கான கொடுப்பனவுகளை சம்மேளன பிரதிநிதி ஓய்வுபெற்ற அதிபர் மௌஸுர் சேர் மற்றும் மௌலவி றாஹிமின்-பைஸி அவர்களிடமும் முதலாம் வாயக்கால் முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் மகல்லாவில் அடையாளம் காணப்பட்ட அங்கவீனர்களுக்கான கொடுப்பனவுகளை சம்மேளன உபதலைவர் சாஜஹான் ஆசிரியர் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது அல் ஹம்துலில்லாஹ்!

இந்திகழ்வில் சம்மேளன பொது செயலாளர் Jiffry Razick மற்றும் பைத்துஸ் ஸக்காத் செயலாளர் ஜுனைட் சேர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

20/02/2026

பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் வேண்டுகோள்
-----------------------------
நாட்டில் தற்பொழுது க.பொ.த. சா/தர பரீட்சை (GCE O/L ) நடைபெறுகின்ற காரணத்தினால் பள்ளிவாயல்களில் நடைபெறுகின்ற தொழுகை, பயான், அல் குர்ஆன் ஓதுதல் போன்ற அமல்களை உள் பள்ளியில் மாத்திரம் ஒலி எழுப்பும் வகையில் அமைத்துக்கொள்ளுமாறு பணிவாக வேண்டிக்கொள்கிறோம்.

ரமழான் மாதம் மிகவும் புனிதமானது எனவே இதன் புனிதத்துவத்தை பேணி யாருக்கும் தொல்லையின்றி நிர்வாகங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு பகுத்தறிவுள்ள அனைவருக்கும் விளங்கும் விடயம், இருப்பினும் பல ஊர்களில் இருந்து சம்மேளனத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளது, இருப்பினும் பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்பது அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு அமைப்பே தவிர நீதிமன்றமல்ல. இதனை மீறும் நிர்வாகங்களை தண்டிக்கவோ தண்டனை வழங்கவோ முடியாது ஆயினும் இதனை ஞாபகமூட்டி தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

எனவே அனைத்து பள்ளிவாயல் நிருவாகச்களும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்கு தொல்லை கொடுப்பது ஒரு நல்ல நிருவாகத்திற்கு அழகல்ல.

இப்படிக்கு,

றாஸீக் ஜிப்ரி (MBA),
பொதுச்செயலாளர்,
பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம்.

 #போதையின்  #கொடூரம் தம்பாளையில் 17 வயது மாணவி கோடரியால் கொத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே!!!நாம் இ...
06/02/2026

#போதையின் #கொடூரம்

தம்பாளையில் 17 வயது மாணவி கோடரியால் கொத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே!!!

நாம் இன்னும் இவற்றை ஒரு சம்பவம் / செய்தி என்றே கடந்து போக போகிறோமா? அல்லது விழித்துக்ககொள்ள போகிறோமா?

ஊர் தலைமைகளே உசாராகுங்கள்...
இளைஞர்களே விழித்துக் கொள்ளுங்கள்.

நாம் அழிந்து கொண்டிருக்கிறோம்.

25/01/2026

பொலன்னறுவை மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையும் விற்பனையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

மக்கள் விழிப்படைய வேண்டும்.

17/12/2025

#கோடான_கோடி_நன்றிகள்
------------------------------------------------------------
ஒரு அனர்த்தம் என்றதும் ஓடோடிவந்து உதவிய, ஜாதி, மதம் பார்க்காமல் பசி அனைவருக்கும் பொதுவானது என பசி தீர்த்த உறவுகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட பைத்துஸ்ஸக்காத் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகள் மிகவும் மெச்சத்தக்கதாக இருந்தது நேரத்திற்கு தேவையானதாக அமைந்திருந்தது. நாட்டில் பல பிரதேசங்களும் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் அனர்த்த சேவைகளை முறையாக வழங்குவது அரசாங்கத்திற்கு சவாலாக இருந்தது இருப்பினும் உங்கள் சேவை மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.

வெள்ளத்தினால் மூழ்கிய வீடுகளை சுத்தப்படுத்துவதில் பல ஊர் இளைஞர்கள் தாமாக முன்வந்து செய்தனர். அது அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெறும் ஆறுதலாக அமைந்திருந்தது.

மனதளவில் மிகவும் உடைந்துபோய் இருந்த உறவுகளுக்கு உங்களின் வரவும் ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கையூட்டியது. அவர்கள் சுத்தம் செய்ய எவ்வளவு காலம் போகுமோவென்று துவண்டுபோயிருந்த நேரத்தில்தான் உங்கள் சேவை மெச்சத்தக்கதாக இருந்தது.

ஒரு சில சகோதரர்கள் நிவாரண பொதிகளோடு வந்த நேரத்தில் மழை பெய்தது அவர்கள் நனைந்து அந்த பொருட்களை பாதுகாத்து அமானிதமாக மக்களுக்கு அந்த பொருட்களை வழங்கினார்கள்.

மற்றவர்களின் பசி தீர்க்க அவர்கள் பசியோடு இருந்தார்கள் உங்கள் அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் கண்மணி நாயகத்தின் பொருட்டால் அனைத்தையும் இலகுவாக்கட்டும்... உங்களின் ஆயுளிலும் பொருளாதாரத்திலும் பரகத் செய்யட்டும்.

ஜஸாக்கமுல்லாஹு ஹைரன்! ♥️

பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை கிளை,
பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், மற்றும் பொலன்னறுவை மாவட்ட பைத்துஸ்ஸக்காத்.

Address

Town Jumma Masjid
Kaduruwela
540001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Federation of Polonnaruwa district Mosques and NGOs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share