22/03/2023
“கோகிலம்” நூலாசிரியருக்கு பாராட்டும் கௌரவிப்பும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹய்கெயா பெக்கிங் சர்விஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முத்துலிங்கம் துரைராஜா அவர்களின் நிதி உதவியில் இங்கிரிய, றைகம் மேல் பிரிவை சேர்ந்த மாணவி யோகேஸ்வரன் கோகிலேஷ்வரியின் “கோகிலம்” நூல் வெளியீடு களுத்துறை சிறகு ஒன்றியம் ஏற்பாட்டில் 2023-03-19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் றைகம் கீழ் பிரிவு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது களுத்துறை மண்ணுக்கே பெருமை சேர்த்த “கோகிலம்” நூலினை எழுதி வெளியீட்ட செல்வி.யோ.கோகிலேஷ்வரி அவர்களை றைகம் மேல் பிரிவு உதயம் இளைஞர் மன்றம் சார்பில் பாராட்டியும் கௌரவித்தும் இலங்கையின் “இளம் எழுத்தாளர்” எனும் விருதும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் றைகம் கீ/பி ஆலய குருக்கள் பல்கலைகழக வரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதி, ஆலய தலைவர்கள், தோட்ட தலைவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.
படப்பிடிப்பு : Akila Balasuriya Photography