Eastern Cancer Care Hospice

Eastern Cancer Care Hospice (Guarantee) Limited

 #அரிய_வாய்ப்பு_மீண்டும்_வருகிறது...ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது(Eascca Hospice) த...
04/04/2024

#அரிய_வாய்ப்பு_மீண்டும்_வருகிறது...

ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது(Eascca Hospice) தொடர்ந்து நடாத்திவரும் ''நோயாளர் பராமரிப்பு(Patient Care)'' இலவச இரண்டுநாள் வதிவிடப் பயிற்சி நெறியானது அனைவருக்கும் மிகவும் பிரயோசனமான ஒன்றாக அமைந்துள்ளது.

நமது வீட்டிலிருக்கும் நோயாளர்கள், வயோதிபர்கள், வலதுகுறைந்தவர்கள் , விஷேட தேவையுடையவர்கள் போன்றோரை ''அடிப்படை மருத்துவ அறிவோடு எவ்வாறு பராமரிப்பது'' என்பது பற்றிய அறிவினை இப்பயிற்சிநெறி அனைவருக்கும் வழங்குகின்றது.

இன்றுவரை சுமார் 1200 இற்கும் அதிகமானவர்கள் நாடளாவிய ரீதியில் இதில் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறார்கள்.

ஆண் , பெண் இருபாலாரும் கலந்துகொள்ளக்கூடிய, வயதெல்லைகளற்ற இவ் வதிவிடப் பயிற்சிநெறியில் கலந்துகொள்ள தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கான இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

பயிற்சிநெறி முடிவில் பெறுமதியான சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படுகின்றது. சான்றிதழ் கடடணமாக ரூபாய் 1000 மாத்திரம் செலுத்தவேண்டும்.

பயிற்சிநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு வாரமும், வாரநாட்களான புதன் வியாழன் மற்றும் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறும்.

இம்மாதம்(ஏப்ரல்) 17,18(புதன் வியாழன்), 20,21(சனி ஞாயிறு), 24,25(புதன் வியாழன்), 27,28(சனி ஞாயிறு) ஆகிய தினங்களில் வகுப்புக்கள் நடைபெறும்.

ஆர்வமுள்ளவர்கள் ... உங்களுக்கு பங்குபற்ற இயலுமான திகதி, உங்களது முழுப்பெயர், முகவரி மற்றும் வாட்ஸாப் இலக்கம் ஆகியவற்றினை 0777557553 எனும் வட்ஸப் இலக்கத்துக்கு அனுப்பிவையுங்கள்.

ஏனையவர்களும் கலந்துகொண்டு பயன்பெற இந்தப் பதிவினை அதிகமதிகம் பகிர்ந்து உதவுங்கள்.
நோயாளர் பராமரிப்பு பயிற்சிநெறி இணைப்பாளர்,
கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம், ஏறாவூர்.

'' #அரிய_வாய்ப்பு_தவற_விடாதீர்கள்'' ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது, '' #நோயாளர்_பராம...
20/03/2024

'' #அரிய_வாய்ப்பு_தவற_விடாதீர்கள்''

ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது, '' #நோயாளர்_பராமரிப்பு(Care Givers)'' பற்றிய இரண்டுநாள் வதிவிட பயிற்சிநெறியினை அனைவருக்கும் இலவசமாக வழங்கிவருகின்றது.

ஆண் , பெண் இருபாலாரும் கலந்துகொள்ளக்கூடிய, வயதெல்லைகளற்ற இவ் வதிவிடப் பயிற்சிநெறியில் கலந்துகொள்ள தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கான இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இற்றைவரை சுமார் 1200 க்கும் மேற்பட்டவர்கள் இப்பயிற்சிநெறியில் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறார்கள்.

அந்தவகையில், எதிர்வரும் ஏப்ரல்( April ) மாதம் தொடக்கம் தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற இந்த ''நோயாளர் பராமரிப்பு(Care Givers)'' பயிற்சிநெறியில் கலந்துகொள்பவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்தப் பதிவோடு இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் விண்ணப்பப்படிவ இணைப்பினைத் (Google Form) திறந்து, அங்கே வரும் விண்ணப்பப்படிவத்தினை பொருத்தமான தகவல்களை வழங்கி பூரணப்படுத்தி சமர்ப்பிக்கவேண்டும்.

Google Form Link ..
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScH0Tr1RyelPOSs0d-rwiovVTQDNSKyGUOdscv6IFVக்UzzBYqw/viewform

அதனோடு, சான்றிதழ் கட்டணமாக செலுத்தவேண்டிய 1000 ரூபாவை இங்கு தரப்படும் வங்கிக் கணக்கிலக்கங்களில் ஒன்றில் வைப்புச் செய்து பின்னர் அதற்கான வைப்புச் சீட்டினை (Deposit Slip) விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கவேண்டும். மேலும் சான்றிதழில் இணைப்பதற்கான வெள்ளைப் பின்னணியுடன் (White Backround) கூடிய தெளிவான கடவுச்சீட்டு அளவு (Passport Size) புகைப்படம் ஒன்றும் இணைக்கப்படவேண்டும்.

bank (Eravur Branch)
123100100049812
(Eravur Branch)
80399613
(Eravur Branch)
135010005986
Bank (Chenkaladi Branch)
1000513545
Bank (Eravur Branch)
0010273276001

விண்ணப்பதாரிகள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் ஒழுங்குமுறைக்கமைவாக வரிசைக்கிரம அடிப்படையில் பயிற்சிநெறி வகுப்புப் பிரிவுகளுக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு வட்ஸப் செயலி( Whatsapp ) ஊடாக அவர்கள் கலந்துகொள்ளவேண்டிய திகதி மற்றும் ஏனைய தகவல்கள் அனுப்பப்படும். (வட்ஸப் செயலி இலக்கம்(Whatsapp Contact Number) குறிப்பிடாதவர்களுக்கு தகவல்களை வழங்குவதில் சிரமங்கள் ஏற்படலாம்)

கீழே தரப்பட்டிருக்கும் தொலைபேசி இலக்கங்களை தினமும் அலுவலக நேரமான காலை 8 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையான காலப்பகுதிக்குள் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
தொடர்பிலக்கங்கள் : #0777557553 , #0766550882

மேம்படுத்தப்பட்ட இலவச பயிற்சிநெறியாக தொடர்ந்தும் இதனை நடாத்தவும், நாடளாவிய ரீதியில் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறவும் இந்தப் பதிவு அனைவரையும் சென்றடையும் வகையில் பகிர்ந்து உங்களது ஆதரவினையும் பங்களிப்புக்களையும் நல்குமாறு அன்போடு வேண்டுகின்றோம்.

ஏறாவூர் 2 , அஷ்ரப் வீதியில் வசிக்கும் அன்புச் சகோதரி ''Mufliha Munastheen'' இன் அனுசரணையிலான FamilyTreat பகலுணவு வழங்கும...
15/02/2024

ஏறாவூர் 2 , அஷ்ரப் வீதியில் வசிக்கும் அன்புச் சகோதரி ''Mufliha Munastheen'' இன் அனுசரணையிலான FamilyTreat பகலுணவு வழங்கும் நிகழ்வு நேற்று(14.02.2024) நடைபெற்றது.

சகோதரி ''Mufliha Munastheen''ம் அவரது குடும்பத்தினரும் Eascca வுக்கு வருகை தந்து, Eascca வளாகத்தை முழுவதும் சுற்றிப்பார்த்து, புற்றுநோயாளர்களுக்கு இங்கு வழங்கப்படும் இலவச பராமரிப்பு சேவைகள் பற்றி முழுவதும் அறிந்துகொண்டார்கள். நோயாளர்களுடன் சேர்நது தாங்களும் உணவருந்தினார்கள்.

மேலும் தொடர்ந்தும் புற்றுநோயாளர் பராமரிப்புக்காக தமது பங்களிப்புக்களை வழங்கும் முகமாக, ''வீட்டுக்கொரு உண்டியல்'' திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் புற்றுநோயாளர் பராமரிப்பு நிதி சேகரிப்பு உண்டியல்களையும் பெற்றுச் சென்றார்கள்.

அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

எல்லாம் வல்ல இறைவன் அவர்கள் அனைவருக்கும் நீண்ட ஆரோக்கியமான ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்வினையும் வழங்கிட பிரார்த்திக்கின்றோம்.

Swiss இல் வசிக்கும் ''Mr & Mrs Parasiraman Thuraisingam - Ranjanie'' தம்பதிகள்  தமது 25 ஆவது திருமண நினைவு நாளை கொண்டாடு...
15/02/2024

Swiss இல் வசிக்கும் ''Mr & Mrs Parasiraman Thuraisingam - Ranjanie'' தம்பதிகள் தமது 25 ஆவது திருமண நினைவு நாளை கொண்டாடும் வகையில் இன்றைய(15.02.2024) FamilyTreat - Lunch பகலுணவு வழங்கும் நிகழ்வுக்கான அனுசரணையினை வழங்கியிருந்தார்கள்.

அவர்களால் இதில் கலந்துகொள்ள முடியாதபோதும் அவர்களது சார்பாக Eascca Hospice நிருவாகிகளால் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. இதன்மூலமாக கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திலே(Eascca Hospice) பராமரிக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்படும் புற்றுநோயாளர்கள், அவர்களுடன் உதவிக்காக உடனிருக்கும் உறவினர்கள் மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் போன்றோருக்கான பகல் உணவு வழங்கப்பட்டது.

''Mr & Mrs Parasiraman Thuraisingam - Ranjanie'' தம்பதிகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இன்று போல் என்றும் பூரண ஆரோக்கியத்தோடும், மனமகிழ்ச்சியோடும், நிறைவான செல்வத்தோடும் ஒற்றுமையாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

12/02/2024
புற்றுநோயால் அவதியுறும் உறவுகளுக்கான இலவச பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் பாகுபாடுகளின்றி வழங்கிவரும் ஏறாவூர் - கிழ...
11/02/2024

புற்றுநோயால் அவதியுறும் உறவுகளுக்கான இலவச பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் பாகுபாடுகளின்றி வழங்கிவரும் ஏறாவூர் - கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது(Eascca Hospice), புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு தொடர்ந்தேச்சையாக நடாத்திவருகின்றது.

அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டங்களையும் இலக்குவைத்து அங்கு வாழும் பொதுமக்களுக்கான, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் பரவலாகவும், வலுவூட்டப்பட்டதாகவும், மேம்படுத்தப்பட்ட வகையிலும் அவ்வப்பிரதேச புத்திஜீவிகள், அரச சேவை நிறுவனங்களின் அதிகாரிகள், வைத்தியத்துறை சார் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், கிராமசேவை அலுவலர்கள், சமூகசேவை நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் போன்றவர்களின் பங்கேற்புடனும் கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் வளவாளர்கள். மருத்துவர்கள், தாதியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வினை வழங்கும் வகையிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் அடுத்த கட்டமாக , அம்பாறை மாவட்டத்தினை முதன்மைப்படுத்தி, அங்கிருந்து இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் வகையிலான முதலாம் கட்ட விஷேட கலந்துரையாடலொன்று இன்று(11.02.2024) கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ''அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை'' யின் கல்முனை பிரதேசத்துக்கான முக்கிய பிரதிநிதிகள் சிலர் கலந்துகொண்டார்கள். இதன்போது இவ் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தினை திறம்பட நடாத்துவதற்கான முக்கிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இரண்டாம் கட்ட கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்தின் சகல பகுதிகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் மதகுருமார்களை உள்ளடக்கியதாக அமையும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (04.02.2024) நடைபெற்ற ''இலங்கையின் 76 வது சுதந்திரதின மற்றும் உலக ...
05/02/2024

கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (04.02.2024) நடைபெற்ற ''இலங்கையின் 76 வது சுதந்திரதின மற்றும் உலக புற்றுநோயாளர் தின'' நிகழ்வுகளில் எமது அழைப்பினையேற்று பங்குபற்றி சிறப்பித்த அதிதிகளுக்கான நினைவுப் சின்னங்கள் வழங்கிய அழகிய தருணங்கள்...

''பெறுமதியான வாய்ப்பு...தவறவிடாதீர்கள்''==================================''நோயாளர் பராமரிப்பு (Care Giver) பற்றிய அறிவு...
05/02/2024

''பெறுமதியான வாய்ப்பு...தவறவிடாதீர்கள்''
==================================

''நோயாளர் பராமரிப்பு (Care Giver) பற்றிய அறிவு உங்களுக்கும் வேண்டுமா...?''

ஏறாவூர் கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் வழங்கிவரும் இலவச ''நோயாளர் பராமரிப்புப் பயிற்சிநெறி''யில் நீங்களும் இணைந்துகொள்ளலாம்.

எதிர்வரும் காலங்களில் ''நோயாளர் பராமரிப்பு'' முறையாகத் தெரிந்த ஒருவர் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கவேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்தப் பயிற்சி நெறியானது நடத்தப்படுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிநெறியில்...

* நீரிழிவு நோயாளர் பராமரிப்பு, அவர்களுக்கான முதலுதவிகள், குளுக்கோஸ் அளவை கணிப்பிடுதல், ஊசிமூலமான இன்சுலின் செலுத்துதல், புண் பராமரிப்பு.

* இரத்த அழுத்த பரிசோதனை.

* நம்மிடமிருந்து நோயாளருக்கும் , நோயாளரிடமிருந்து நமக்கும் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாத்தல்.

*காயங்களுக்கு மருந்து கட்டுதல்.

* நோயாளரை ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு மாற்றுதல், அவருக்கான படுக்கையை தயார் செய்தல்,

* நோயாளரின் வாய்ச்சுத்தம் பேணுதல்,கட்டிலில் வைத்து நோயாளரை குளிப்பாட்டுதல் மற்றும் படுக்கைப்புண் பராமரிப்பு.

* இயங்கமுடியா நிலையில் படுக்கையில் இருக்கும் நோயாளரின் மலசல கையாளுகை.

* நாசிவழி இரைப்பை குழாய் மூலம் நோயாளருக்கான உணவூட்டல் முறைகள்.

* மருந்துகளை இனங்கண்டு , அவற்றினை கவனமாக கையாளுதல் தொடர்பான பரிபூரண விளக்கம்.

* ஆரோக்கியமான உணவுவகைகளை அறிந்து அவற்றினை நோயாளருக்காக தயார்செய்தல்.

* பெண்களை அதிகமதிகம் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய் தொடர்பான அறிவுறுத்தல் மற்றும் சுயபரிசோதனை செய்தல் தொடர்பான பயிற்சிகள்.
போன்ற , நோயாளர் பராமரிப்புத் தொடர்பான அடிப்படை விடயங்கள் அனைத்தும் சிரேஷ்ட வைத்தியர்கள், தாதியர்கள் மூலம் துல்லியமாகவும், முறையான பயிற்சிகளுடனும் கற்றுத் தரப்படுகிறது.
பயிற்சிநெறி முடிவில் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.

வயதெல்லை கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

* தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கான இலவச தங்குமிட வசதிகள் , மற்றும் இலவச உணவு ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

* பயிற்சிநெறி நடைபெறும் காலப்பகுதியில் பங்குகொள்ளும் அனைவருக்குமான உணவு மற்றும் குடிபானங்கள் இலவசமாக வழங்கப்படும்.

* பயிற்சிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் (Materials) இலவசமாக வழங்கப்படும்.

* சான்றிதழ்களுக்காக மட்டும் ரூபா 1000 அறவிடப்படும்.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவிருக்கும் தினங்கள்...

#மார்ச்
========
02,03 சனி , ஞாயிறு
06,07 புதன் , வியாழன்
09,10 சனி , ஞாயிறு
13,14 புதன் , வியாழன்
16,17 சனி , ஞாயிறு
20,21 புதன் , வியாழன்
23,24 சனி ,ஞாயிறு
27,28 புதன் , வியாழன்
30,31 சனி , ஞாயிறு

ஆர்வமுள்ளவர்கள் Whatsapp ஊடாக மாத்திரம் தங்களது முழுப்பெயர், முகவரி, தொழில், வாட்சப் தொடர்பிலக்கம் என்பனவற்றுடன் பங்குபற்றும் திகதியையும் குறிப்பிட்டு அனுப்பிவைக்கலாம்.

Issath Musthafa : 0777557553

இலங்கைத் திருநாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் சர்வதேச புற்றுநோயாளர் தினம் ஆகியனவற்றை நினைவுகூரும் மிக முக்கியமான ...
04/02/2024

இலங்கைத் திருநாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் சர்வதேச புற்றுநோயாளர் தினம் ஆகியனவற்றை நினைவுகூரும் மிக முக்கியமான நிகழ்வு இன்று கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திலே(Eascca Hospice) நிலையத்தின் கௌரவ தவிசாளர் Abdul Majeed அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இங்கு பராமரிக்கப்படும் புற்றுநோயாளர்களின் பங்குபற்றுதலுடன், இந்நிகழ்வின் பிரதம அதிதியாக Mrs.Nihara Mowjood(SLAS, Divisional secretary of Eravur Town) கலந்து சிறப்பிக்க, கௌரவ அதிதிகளாக Dr.S.Sasikumar (MS - Eravur Base Hospital), Dr.F.Safira Mohamed Wasim(MOH Eravur), Mr.V.Patgunan (Secretary of Eravur Pattu Pradesiya Sabha), Mr.MHM Hameem (Secretary of Eravur Urban Council) ஆகியோரும், விஷேட அதிதிகளாக Mr.Harsha De Silva (Chief Inspector of Police, Eravur) , Ash.AL.Sajith Husain - Baqavi (President of ACJU-Eravur), Alhaj YL Saleem(President of Eravur Traders Union) ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

அதுமட்டுமல்லாமல், Eascca வின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் தங்களது உயரிய பங்களிப்புக்களை நல்கிய ஏறாவூரின் சமூக சேவை அமைப்புக்களின் அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் , பரோபகாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

காலை 10.30 மணியளவில் தேசிய கீதம் இசைத்தலுடன் தாய்த்திருநாட்டின் தேசியக் கொடி ஏற்றிவைக்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அத்தனை நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக Eascca வுக்கான ''மூலிகைத் தோட்டம்(Herb Garden)'' ஒன்றினை ஆரம்பித்துவைக்கும் வைபவமும் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளின் கரங்களினால் சுமார் 80 வகையான மூலிகைச் செடிகள் நடப்பட்டன. எதிர்காலத்தில் மிகவும் தரம்வாய்ந்த பாரியளவிலான மூலிகைத் தோட்டமொன்றினை உருவாக்கும் திடடத்தின் ஆரம்பக்கட்டமாக இந்த மூலிகைக் கன்றுகள் நட்டுவைக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அதிதிகள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிப்பதோடு, கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.



Address

Savukkady Road, Savukkady, Eravur Pattu
Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eastern Cancer Care Hospice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share