Social Welfare Organization, Batticaloa

Social Welfare Organization, Batticaloa The Social Welfare Organization (SWO) established as a charity organization in 1996, by social service activist Mr.K.Satguneswaran.

சிறார்களை மகிழ்விக்க சிறந்த இடம் எமது விவேகானந்த பூங்கா !சனி, ஞாயிறு, பௌர்னமி மற்றும் அரச விடுமுறை தினங்களில் விவேகானந்த...
06/01/2026

சிறார்களை மகிழ்விக்க சிறந்த இடம் எமது விவேகானந்த பூங்கா !

சனி, ஞாயிறு, பௌர்னமி மற்றும் அரச விடுமுறை தினங்களில் விவேகானந்த பூங்காவில் “சிறுவர் விளையாட்டுப் பகுதி” காலை 8.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை திறந்திருக்கும்.

மேலதிக விபரங்களுக்கு:
076 045 0001

ஏழை மாணவர்களின் கல்விக்கான உதவித் திட்டம் - 2026
01/01/2026

ஏழை மாணவர்களின் கல்விக்கான உதவித் திட்டம் - 2026

அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !எமது swo நிறுவனமானது 1996ஆம் ஆண்டு திரு.க.சற்குணேஸ்வரன்  அவர்களால் ஸ...
01/01/2026

அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

எமது swo நிறுவனமானது 1996ஆம் ஆண்டு திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு, அதே ஆண்டில் களுவாஞ்சிக்குடி ம.தெ.எ.ப பிரதேச செயலகத்தில் ஒரு தொண்டு நிறுவனமாக பதியப்பட்டு, பின்னர் சேவைப் பணிகளை மாவட்ட ரீதியாக விரிவுபடுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஒரு தொண்டு நிறுவனமாக பதியப்பட்டு தற்போது பல சேவைப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் தலைமை அலுவலகத்தை கொண்டு இயங்கும் எமது அமைப்பில் தற்போது மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் நிருவாக சபையில் உள்ளனர். அத்தோடு எமது நிறுவன திட்டங்களில் 36 ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர்.

உலகமெங்கும் பரந்து வாழும் நல்லுள்ளங்கள் பலரின் தன்னலமற்ற நன்கொடையினாலும், சில தொண்டு நிறுவனங்களின் நிதியுதவிகளாலும் எமது நிறுவனம் கடந்த 29 ஆண்டுகளாக பல மனிதாபிமான பணிகளை மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது.

நன்றி.

மண்முனை  மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுயதொழில் உதவிகள் வழங்கல் !எமது சமூக நலன்புரி அமைப்பினால், அவுஸ்திரேலியா சிட்னி...
22/12/2025

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுயதொழில் உதவிகள் வழங்கல் !

எமது சமூக நலன்புரி அமைப்பினால், அவுஸ்திரேலியா சிட்னி முருகன் சைவ மன்றத்தின் நிதி உதவியுடன், இரண்டாம் கட்டமாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுயதொழிலை மேற்கொள்கின்ற பயனாளர்களுக்கான உதவிகள் 2025.12.19 ஆம் திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்யானந்தி நமசிவாயம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் அவர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் எமது நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கோழி வளர்ப்பு, தையல் இயந்திரம், மிளகாய் அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட சுயதொழில் உதவிகள் மொத்தமாக ஐந்து பயனாளிகளுக்காக வழங்கி வைக்கப்பட்டன.

https://vivekanandapark.com/wp-content/uploads/2024/08/wisvaroopem.pdf
21/12/2025

https://vivekanandapark.com/wp-content/uploads/2024/08/wisvaroopem.pdf

எமது திருப்பழுகாமம் திலகவதியார்  மகளிர் இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி.!எமது SWO நிறுவனத...
19/12/2025

எமது திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி.!

எமது SWO நிறுவனத்தினால் அவுஸ்திரேலிய சைவ மன்றத்தின் நிதி உதவியின் கீழ், முதற்கட்டமாக எமது இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு கடந்த 2025.12.15ஆம் திகதி எமது பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வினை எமது அமைப்பின் உப தலைவர் திரு.அ.சதானந்தம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் திரு.எஸ்.சங்கீர்த்தன் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபர் திரு. சந்திரசேகரம் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் விபுலானந்தா ஆண்கள் இல்ல முகாமையாளர், எமது நிறுவன இணைப்பாளர் மற்றும் பணியாளர்கள், திலகவதியார் மகளிர் இல்ல முகாமையாளர் மற்றும் பணியாளர்கள், தையல் ஆசிரியை, எமது நிறுவன ஆலோசகர்கள், இல்ல நிர்வாகிகள், வாழ்வாதார உதவி பெறும் பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இல்லக் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

எமது SWO அமைப்பினால் அவுஸ்திரேலிய மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன் நாளை 2025 டிசம்பர் 05 ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச...
04/12/2025

எமது SWO அமைப்பினால் அவுஸ்திரேலிய மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன் நாளை 2025 டிசம்பர் 05 ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 245 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட இருக்கின்றது.

Address

Puthukkudiyiruppu
Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Social Welfare Organization, Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Social Welfare Organization, Batticaloa:

Share