முத்தமிழ் பண்பாட்டுக் கழகம் - Uva Wellassa University of Sri Lanka

  • Home
  • Sri Lanka
  • Badulla
  • முத்தமிழ் பண்பாட்டுக் கழகம் - Uva Wellassa University of Sri Lanka

முத்தமிழ் பண்பாட்டுக் கழகம் - Uva Wellassa University of Sri Lanka இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முத்தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் முகநூல் பக்கம்.

"வணக்கம்! முத்தமிழ் பண்பாட்டுக் கழகம் (MPK), உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் உங்களை வரவேற்கிறோம். தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் தைப்பொங்கல், தீபாவளி, மலைத்தென்றல் போன்ற நிகழ்வுகள், போட்டிகள், கருத்தரங்குகள் மற்றும் புத்தக வெளியீடுகளை இங்கு காணலாம். சமூக சேவை, தலைமைத்துவம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பை நோக்கமாகக் கொண்டு இயங்கும் எங்களுடன் இணைந்து தமிழ் பண்பாட்டின் பெருமையை கொண்டாடுங்கள்!"

பிறப்பென ஒரு நாள் - போன்றே இறப்பென ஒரு நாள் - சேர்ந்தே ஞானமும் பெற்று - கௌதமர் மிளிர்ந்திட்ட திருநாள்நினைவாய் சுடர்களை ஏ...
30/05/2026

பிறப்பென ஒரு நாள் - போன்றே
இறப்பென ஒரு நாள் - சேர்ந்தே
ஞானமும் பெற்று -
கௌதமர் மிளிர்ந்திட்ட திருநாள்

நினைவாய் சுடர்களை ஏற்றி
வனப்பில் மகிழ்ச்சியைக் கூட்ட
கூண்டில் ஒளியினை அடக்கின்
கூண்டும் வெளிச்சத்தில் மிதக்கும் போலே

கருணையும் கலையும்
காற்றினில் வியாபிக்க
அன்பும் தானமும் தழைத்து
மண்ணில் சமாதானமும் நிலவட்டும்

புனித நாளை கூறி
புனிதம் பெருகப் போற்றி
வைகாசி மாத பெளர்ணமியில் புத்தரின் பாதையில் வாழவேண்டிய நோக்கங்களோடு வெசாக் தினத்தை கொண்டாடும் சகோதர உறவுகளுக்கு இதயபூர்வமான வெசாக் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...!

✍️ ம.பானுஜன்
🎨 ப.நவின்

பிறை ஒளி வீசும் நேரமிதுபிரியங்கள் சேரும் காலமிதுதுஆவின் ஓசை காற்றில் கலந்திடதுன்பங்கள் எல்லாம் தூரம் அகன்றிடமக்கா மணம் ம...
27/05/2026

பிறை ஒளி வீசும் நேரமிது
பிரியங்கள் சேரும் காலமிது
துஆவின் ஓசை காற்றில் கலந்திட
துன்பங்கள் எல்லாம் தூரம் அகன்றிட

மக்கா மணம் மனதில் வீச
மதீனா நினைவு உயிரில் பேச
அல்லாஹ்வின் அருள் மழை பொழிந்து
அன்பான வாழ்வு இனிமையாய் அமைய
ஈகையின் வழி அன்பை போதிக்கட்டும்

கைகள் உயர்த்தும் ஒவ்வோர் வேண்டுதலும் கண்கள் காணட்டும் - இன்பத்தின் கூடுதலோடு
அமைதியும் மகிழ்ச்சியும் தொய்வின்றி சுழலும் உலகில் வியாபிக்க
அழகான நாட்கள் வாழ்வில் விரியட்டும்

புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் எமது இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்..!

🎨 பா.ஸஜிந்தன்
✍️ ஆ.மதுஜா

முக்காலத்திலும் எக்காலமும் முடங்காதென,எக்காளமிட்டு முத்தமிழ் தழைத்திடமுனைந்திட்ட முத்துக்கள்...முளைப்பவர்களுக்காய் வழிவி...
22/05/2026

முக்காலத்திலும் எக்காலமும் முடங்காதென,
எக்காளமிட்டு முத்தமிழ் தழைத்திட
முனைந்திட்ட முத்துக்கள்...

முளைப்பவர்களுக்காய் வழிவிட்டு,
மூத்தோர்களாய் பொறுப்பேற்று,
வாழ்வில் முயற்சிகளைத் தொடர்ந்திடவும்,
முழு உலகையும் வென்றிடவும்
கொட்டட்டும் பாராட்டுகள் மும்மாரி போலே!

திக்கெட்டும் முழங்கட்டும்
நம் தாய்மொழியின் புகழே...!

ஒன்றிணைந்து பயணித்த
அனைத்து பிரதிநிதிகளுக்கும்
என்றும் நன்றியுடன்

-முத்தமிழ் பண்பாட்டுக் கழகம்-

🎨 வடிவமைப்பு : பா.ஸஜிந்தன்
✍️ வரிகள் : ம.பானுஜன்

சதை கிழிந்து நீ கிடக்க,சந்தோஷமாய் எனை முகர்ந்தாய்;புறம் தள்ளி எனைப்பெற்று, புலன்யாவும் வலி கொண்டாய்...இது எதுவும் இல்லா ...
10/05/2026

சதை கிழிந்து நீ கிடக்க,
சந்தோஷமாய் எனை முகர்ந்தாய்;
புறம் தள்ளி எனைப்பெற்று,
புலன்யாவும் வலி கொண்டாய்...

இது எதுவும் இல்லா போதும்,
இமை இடுக்கில் சேய் வைத்து
இடர் ஏதுவும் அண்டாமல் புதுக்கனவு விதைக்கின்றாள்...

ஒற்றை வலி வரமின்றி,
கொற்றைச்சனம் சொல்லில் உடைந்து - அவள்
மொத்த ஏக்கம் கொட்டித்தீர்கும் அத்தனையும் - அவள்
சேய் என்பேன் !

அவள் ஜந்தெழுத்துப் படித்தாலும்,
அறிவியலைக் கரைத்தாலும்,
"சீமதுரை" தன் பிள்ளை - என்று
சிந்தனையில் செதுக்கும் சிற்பி அவள் !

தொப்புள் கொடி உறவினிலும்,
மார்பு மடி பாலினிலும்
மாண்பு மிக்க வளர்த்த உன்னை - அவள் முதுமை தவழ்ந்த தருணமதில்
"உயிர் வதைக்கும் கஞ்சி" என்று
மறுத்து மறுத்து ஊற்றுவது ஏன் ?

அன்னை அவள் அன்பிற்கு அடங்காத ஏதுமில்லை ,
பெண்மைதனை போற்றாத பேரொளியும் ஏதும் இல்லை !

யாவர்க்கும் உள்ளினும் தீராப்
பெருமகிழ் - தாயதிகாரம் !

தாய்மையின் பேரதிசயங்களான அனைத்து அன்னையர்களுக்கும் இனிய தாய்மை தின வாழ்த்துக்கள் 🤍✨️

✍️ ஆ.மதுஜா
🎨 நி.நிதர்சன்

வேர்வை விழுவதில் மட்டும்வேலை முடிவடையாதேசுற்றும் விசிறிகள் அறியும் - அலறும்மன்மதன் கதையே!இருந்தும்,எத்தொழிலேனும் இழிவில்...
01/05/2026

வேர்வை விழுவதில் மட்டும்
வேலை முடிவடையாதே
சுற்றும் விசிறிகள் அறியும் - அலறும்
மன்மதன் கதையே!

இருந்தும்,

எத்தொழிலேனும் இழிவில்லை இங்கு
ஈட்டல் இயல்பினிதானால்
எஞ்சும் ஊதியத்தின் உழைப்புண்மை
ஈன்ற வழி சரியானால்

வீடு தாண்டி வீதிக்கெனவும்
கடமை செய்ய
கூலி தாண்டிப் பெருமை கொள்ளும்
கருமம் செய்வோம்.

உழைப்பாளர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் உரித்தாவதோடு
உழைப்பின் சிரமங்கள் அத்தனையும் பெருமைகளாக மாறி தொய்வின்றி சுழலட்டும் உலகு...!

🎨 வடிவமைப்பு : பா.ஸஜிந்தன்
✍️ வரிகள் : ம.பானுஜன்

முகநூல் பக்கம் : https://www.facebook.com/share/1DUZDadcsh/

தெளிந்திட சஞ்சலங்களும்அழிந்திட மும்மலங்களும் - அடங்காமனமது விடியலே வேண்டி நிற்கும்தினமொரு புது வழி தேடி நிற்கும்உள்ளம் த...
13/04/2026

தெளிந்திட சஞ்சலங்களும்
அழிந்திட மும்மலங்களும் - அடங்கா
மனமது விடியலே வேண்டி நிற்கும்
தினமொரு புது வழி தேடி நிற்கும்

உள்ளம் தனக்கென்று இடம்கொண்டு
அன்பில் தழைத்திங்கு பார் வெல்ல
சித்திரையில் பகலவனும் தவழ்ந்திடவே
சிறப்புடன் புது வருடம் பிறந்திடுதே!

🎨 வடிவமைப்பு : பா.ஸஜிந்தன்
✍️ வரிகள் : ம.பானுஜன்

மனுகுலம் மீட்கவே மண்ணிழுதித்து,மாட்சிமை காக்கவே மரணத்தை வென்று,இரத்தத்தை கண்ணீராய் சொரிந்து,வெந்நீர் வியர்வை மெய்யில் கர...
04/04/2026

மனுகுலம் மீட்கவே மண்ணிழுதித்து,
மாட்சிமை காக்கவே மரணத்தை வென்று,
இரத்தத்தை கண்ணீராய் சொரிந்து,
வெந்நீர் வியர்வை மெய்யில் கரைய…

பாவக் கரைகள் போக்கவே
சிலுவைச் சாவை ஏற்றருளி,
முள் முடி சூட்டிய மன்னனாய்,
மூன்றாம் நாளிலே
முழு உலகும் வியக்க
மாண்டாலும் மீண்டும் உயிர்த்தெழுந்த
தேவதந்தை இரட்சகரை
போற்றி பாடுவோம்

ஏற்றிய இறை இயேசுவின் உதயத்தில்
பாவப்பனி நீங்கும் விடியல் காணுவோம்… 🌅

கிறிஸ்தவ சொந்தங்கள் அனைவருக்கும்
இனிய உயிர்ப்பு ஞாயிறு நல்வாழ்த்துக்கள்...!✨️

🎨 வடிவமைப்பு : A.Ramixshan
✍️ வரிகள் : D.lakshika

இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முத்தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் இனிய ரம்ழான் முபாரக் தின நல்வாழ்த்துகள்🌙✨
20/03/2026

இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முத்தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் இனிய ரம்ழான் முபாரக் தின நல்வாழ்த்துகள்🌙✨

கண்ணீரை வலிமையாக்கி வெற்றி மகுடம் சூள்பவள்,தோல்வியை படிக்கட்டாக்கி சிகரத்தை தொடுபவள்,பயத்தின் கதவுகளை தகர்த்து எறிந்தவள்...
13/03/2026

கண்ணீரை வலிமையாக்கி
வெற்றி மகுடம் சூள்பவள்,
தோல்வியை படிக்கட்டாக்கி சிகரத்தை தொடுபவள்,
பயத்தின் கதவுகளை
தகர்த்து எறிந்தவள்,
வானம் வசப்பட சிறகுகள் விரித்தவள்...

அடிமை அல்ல அவள் – அறிவின் அக்னி!
அமைதி அல்ல அவள் – அறத்தின் முழக்கம்!
பாரதி உரைத்த சுதந்திரத்தின் உயிரோட்ட பிம்பம் அவள்!

மௌனத்தின் சிறை உடைத்து,
முழக்கமிடும் புரட்சியின் குரல்!
முன்னேற்றத்தின் முகவரியான மகளீர் சாதனையின் சிகரம் தொடும் தருணமிது🤍

இனிய நல்வாழ்த்துக்கள்...!✨️

🎨 வடிவமைப்பு : செ.டிலக்சன்
✍️ வரிகள் : பு .டிலோனிகா

இருள் கொய்யும் காட்டில் ஒளியாய் மலர்ந்திருக்க விதி நெய்யும் ஏட்டில் கருவாய் மறைந்திருக்க மதி போகும் போக்கில் மார்க்கம் அ...
12/03/2026

இருள் கொய்யும் காட்டில் ஒளியாய் மலர்ந்திருக்க
விதி நெய்யும் ஏட்டில் கருவாய் மறைந்திருக்க
மதி போகும் போக்கில் மார்க்கம் அமைத்திருப்பாள்
சதி நூறு கண்டும் துணிவாய் எதிர்த்திருப்பாள்...

அழுகை அஹிம்சை மொழியோ
அமைதி அடிமை நெறியோ
அது ஒரு கனா காலம் - என்றும்
அறம் பொருட்டு ஏவி நிற்பாள்,
மறம் தரித்து போரில் வெல்வாள்...

அவள்,
மனதை மூழ்கடிக்க மௌனம் கூடினாலும்
மமதை பெயர் புனைத்து வசைகள் சாடினாலும்
மிடுக்குடன் உடைத்திட,
திரண்டிடும் தீப்பொறி
வரம்புகள் வகுப்பதால்
வழியினை மாற்றுமோ...!

இனிய நல்வாழ்த்துக்கள்...!✨️

🎨 வடிவமைப்பு : ப.நவின்
✍️ வரிகள் : ம.பானுஜன்

Address

Passara Road
Badulla
90000

Alerts

Be the first to know and let us send you an email when முத்தமிழ் பண்பாட்டுக் கழகம் - Uva Wellassa University of Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to முத்தமிழ் பண்பாட்டுக் கழகம் - Uva Wellassa University of Sri Lanka:

Share