Vazhiththunai Murugan Temple

  • Home
  • Vazhiththunai Murugan Temple

Vazhiththunai Murugan Temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vazhiththunai Murugan Temple, Non-Governmental Organization (NGO), NH45, Kallur Road, Ma Podaiyur Post, Tamil Nadu 606108, .

*வைகாசி விசாக திருவிழா அழைப்பிதழ்* வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் *கல்லூர்* கிராமத்தில் அமைந்துள்ள *...
02/06/2025

*வைகாசி விசாக திருவிழா அழைப்பிதழ்*

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் *கல்லூர்* கிராமத்தில் அமைந்துள்ள *காவடி சித்தர்* வளாகத்தில் அருள்பாலிக்கும் நமது *தருமமிகு வழித்துணை முருகன்* (தினசரி அன்னதான மடம்) கோவிலில் வருகின்ற *(08-06-2025) ஞாயிற்றுக்கிழமை* அன்று காலை *கணபதி ஹோமம்* நடைபெறும். பிறகு பக்தர்கள் *பால்குடம்* மற்றும் *காவடி* எடுத்து வழித்துணை முருகனுக்கு *பால் அபிஷேகம்* செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

மேலும் *வைகாசி விசாக தினமான (09-06-2025) திங்கட்கிழமை* காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நமது *தருமமிகு வழித்துணை முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்* செய்யபட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் *சிறப்பு அன்னதானமாக அறுசுவை உணவு* மற்றும் வடை பாயசத்துடன் *மதிய உணவு* பரிமாறப்படவுள்ளது.

*பக்தகோடிகள்* அனைவரும் *வைகாசி விசாக திருவிழாவில்* கலந்து கொண்டு முருகப்பெருமானின் *அருளை பெறுமாறு* கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அன்னதானத்தை சிறப்பிக்க அனைவரும் வருக! வருக!

இங்ஙனம்
என்றும் இறைப்பணியில்
*முருகன் அடிமை முத்துசாமி*
9500881261
9360089059

#வைகாசி #விசாகம் #முருகன் #முருகா #கோவில் #கோயில் #முருகன்கோவில்

கடலூர் மாவட்டம் கல்லூர்  கிராமத்தில் அமைந்துள்ள காவடி சித்தர் வளாகத்தில்  அருள்பாலிக்கும் தருமமிகு வழித்துணை முருகன் திர...
12/04/2025

கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள காவடி சித்தர் வளாகத்தில் அருள்பாலிக்கும் தருமமிகு வழித்துணை முருகன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

மேலும் சிறப்பு அன்னதானம் பக்தகோடிகளுக்கு வழங்கப்பட்டது.

அன்னதானத்திற்கு நன்கொடை மற்றும் பொருள் உதவி செய்த அனைத்து பக்தர்களுக்கும் அன்பர்களுக்கும் கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்க வழித்துணை முருகனை வேண்டி வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

இப்படிக்கு
கோவில் நிர்வாகம்.
9500881261, 093600 89059

பங்குனி உத்திர திருவிழாபங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள காவடி சித்தர்...
07/04/2025

பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள காவடி சித்தர் வளாகத்தில் அருள்பாலிக்கும் நமது தருமமிகு வழித்துணை முருகன் (தினசரி அன்னதான மடம்) கோவிலில் வருகின்ற (10-04-2025) வியாழக்கிழமை அன்று காலை கணபதி ஹோமம் நடைபெறும். பிறகு பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வழித்துணை முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

மேலும் பங்குனி உத்திர தினமான (11-04-2025) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நமது தருமமிகு வழித்துணை முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சிறப்பு அன்னதானமாக அறுசுவை உணவு மற்றும் வடை பாயசத்துடன் மதிய உணவு பரிமாறப்படவுள்ளது.

பக்தகோடிகள் அனைவரும் பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அன்னதானத்தை சிறப்பிக்க அனைவரும் வருக! வருக!!

இங்ஙனம்
என்றும் இறைப்பணியில்
முருகன் அடிமை முத்துசாமி
+919500881261
+919360089059

மாசி மகத்தின் முக்கிய சிறப்பு அம்சங்கள்- இந்த நாளில் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் மனதார வழிபடலாம்.- நம் முன்னோர்களையும்...
11/03/2025

மாசி மகத்தின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

- இந்த நாளில் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் மனதார வழிபடலாம்.

- நம் முன்னோர்களையும்கூட திதியிட்டு வழிபடலாம்.மகம் நட்சத்திரத்தை பித்ருதேவ நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர். எனவே இந்த நாளில் ஆறுகள், குளங்கள், கடல்கள் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் மற்றும் பித்ரு கடன் செய்யவேண்டும்.

- மாசி மகத்தன்றுதான் முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே மாசி மகத்தன்று முருகனுக்கு விரதம் இருந்து ஆண்குழந்தை வேண்டுமென்பவர்கள் தீபமேற்றி முருகனை நோக்கி வேண்டினால் நிச்சயம் ஆண்குழந்தை கிட்டும் என்பது ஐதீகம்.

- தாட்சாயணியாக உமாதேவி அவதரித்த நாள் இது என்பதால் சக்தி வேண்டும் பெண்கள், இந்த நாளில் அம்பிகையை நினைத்து விரதமேற்று வழிபடலாம். அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்ய வெற்றிகளும், வாழ்க்கையில் இன்பங்களும் தேடிவரும்.

- இந்த நாளில் விரதம் இருக்க விரும்புகிறவர்கள் அதிகாலையே எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவரவேண்டும். இப்படி செய்வதால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

- பாதாள உலகில் இருள்சூழ்ந்து கிடந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து மீட்டுவந்த நாளும் மாசிமகம் என்பதால் இந்த நாளில் பெருமாளையும் வழிபடலாம்.மகாவிஷ்ணுவுக்கு துளசி அபிஷேகம் செய்தால் வைகுண்டத்திலேயே இடம் கிட்டும். மேலும் இந்த நாளில் வராக பெருமாளை வழிபட்டால் சொந்த வீடு, நிலம் வாங்கும் பாக்கியம் கிடைக்கும்.

- ஞானம், புத்தி, முக்தி வேண்டி வழிபடுவோர் கேது பகவானை கும்பிடலாம். இதனால் அறிவாற்றல் மேம்படும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நவகிரக சந்ததியில் இருக்கிற கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.

- மாசி மகத்தன்று வெளியே எங்கும் செல்ல முடியாவிட்டாலும் வீட்டிற்கு அருகிலிருக்கும் நீர்நிலைகளிலாவது
அதிகாலை குளித்துவிட்டு, ஒரு கலசத்தில் சுத்தமான நீரை எடுத்து அதில், துளசி, வில்வம், பச்சை கற்பூரம், பூக்கள் மற்றும் விபூதி ஆகியவற்றை போட்டு அவரவர் குல தெய்வத்திற்கு விளக்கேற்றி பூஜிக்கலாம்.

- இப்படி எதுவுமே செய்ய முடியாதவர்கள் மாசி மக புராணம் படித்தாலும் புண்ணியம் கிட்டும்.

Address

NH45, Kallur Road, Ma Podaiyur Post, Tamil Nadu 606108

606108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vazhiththunai Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share