27/12/2023
படித்ததில் பிடித்தது
அன்புள்ள சமுதாய மக்களின் சிந்தனைக்கு சில கருத்துக்கள். கொங்கு மண்டலத்தில் பூர்வீக வரலாறே இல்லாதவர்கள் புத்தகங்கள் பல எழுதி வெளியிட்டு (நம்மவர்கள் பட்டயங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், கோயில் உரிமைகள் ) என அனைத்தையும் தனதாக்கும் முயற்சியில் கடந்த 30-40 ஆண்டுகளில் அரவமே இல்லாமல்,பல தொழில் அதிபர்களின் பண பலத்தால் வெற்றி கண்டு விட்டனர். ஆட்சி அதிகாரத்திலும் கோலோச்சி வருகின்றனர். வரலாறு முழுமையாக இருந்தும் நம்மால் ஓரிரு புத்தகங்களையும்,பல ஆய்வு நூல்களையும் படைத்திட முடியவில்லை. மாற்றனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டதுதான் வேதனையளிக்கிறது. என்று நம் தனித்தன்மையை நிரூப்பிக்கறோமோ அன்று தான் நமக்கு எதிர் காலம். அனைவரும் கள எதார்த்தங்களை புரிந்து கொண்டும், ஒன்றுபட்டும் தொலைநோக்கு பார்வையோடு செயல் பட்டோமேயானல் வெற்றி உறுதி. இல்லையெனில் நான்கு மாடும் சிங்கமும் கதைதான்.