DYFI Udumalai Rural

DYFI Udumalai Rural எல்லோருக்கும் கல்வி..
எல்லோருக்கும் வேலை...

அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந...
19/05/2026

அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகள் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கல்லூரியில் இந்த ஆண்டு 2026-2027 ம் ஆண்டிற்கான ஐடிஐ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவர்களை பதிவு பெற்ற தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க www.skill training.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜூன் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9499055612, 9499055642 ஆக எண்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யது கொள்ளவும். மாணவர்கள் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள்
1. மார்க் சீட்
2. மாற்றுச் சான்றிதழ்
3. ஆதார் அட்டை
4. 2 புகைப்படம்
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச சலுகைகள்
1. மடிக்கணினி
2. ரூ .750/- மாதாந்திர உதவித் தொகை
3. ரூ.1000/- தமிழ் புதல்வன்/புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் (மாதந்தோறும்)
4. வரைபடக் கருவிகள் & பாடப் புத்தகங்கள்
5. சீருடைகள் 2 செட் & ஷூ (காலணி)
6. பஸ் பாஸ் & மிதிவண்டி
ஆகியவை வழங்கப்படுகிறது.
மேற்கண்ட விவரங்களை அரசு தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வர் தொிவித்துள்ளார்.
நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் குழந்தைகள் கல்லூரியில் சேர்ந்து பயனடையுமாறு தொிவித்துக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
தொழிலாளா் உதவி ஆணையா்
(சமூக பாதுகாப்புத் திட்டம்)
திருப்பூர்

நாளை 20.05.2026 புதன்கிழமை மருந்து கடைகள் ( மெடிக்கல்ஸ் ) இயங்காது.. நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம்...
19/05/2026

நாளை 20.05.2026 புதன்கிழமை மருந்து கடைகள் ( மெடிக்கல்ஸ் ) இயங்காது.. நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய மாணவர் சங்கத்...
19/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் திரு. தௌ.சம்சீர் அகமது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடி, கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் திரையரங்கங்களில் பகல் கொள்ளை....தமிழகஅரசே உணவுப் பாதுகாப்புத்துறையே நடவடிக்கைஎடு.. இன்று 18.5.26 மதியம...
19/05/2026

தமிழகம் முழுவதும் திரையரங்கங்களில் பகல் கொள்ளை....

தமிழகஅரசே

உணவுப் பாதுகாப்புத்துறையே நடவடிக்கைஎடு..

இன்று 18.5.26 மதியம் திருப்பூர் ஸ்ரீசக்தி மல்டிபிளக்ஸ் தியேட்டரில் கருப்பு திரைப்படம் தோழர்களுடன் பார்த்தேன்.
டிக்கெட் ஒரே விலைரூ.184
திரையரங்கம் உள்ளே செல்லும் போதே சோதனை செய்து அனுப்புகிறார்கள்.
வெளியிலிருந்து திண்பண்டம் கொண்டுவர அனுமதியில்லை.
இடைவேளையின் போது கேண்டீன் சென்று காபிவிலையை கேட்டால் மயக்கமே வந்து விட்டது.
ஒருகாபி 120ரூ.
பாப்கார்ன்250ரூ.
ஐஸ்கிரீம்240ரூ என விலைப்பட்டியலை பார்த்து பேரதிர்ச்சி ஆனோம்.

தோழர்களிடம் கேட்டால் திருப்பூர் முழுவதும் இதுதான் நிலைமை என்றனர்.

ஒரே வளாகத்தில்..8 தியேட்டரிலும் இதேநிலைதான். 100ரூடிக்கெட் கொடுப்பதில்லை.
காபி உட்பட திண்பண்டங்கள் பயங்கரகொள்ளை..
சாதாரண ரசிகர்களை கொள்ளையடிப்பதை தமிழகஅரசு உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும். காபி உட்பட திண்பண்டங்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
சட்டப்படி விலை தீர்மானிக்க வேண்டும்.
என கேட்டுக்கொள்கிறோம்.
CPIM திருப்பூர் மாவட்டக்குழு.
18.5.26 மாலை6மணி🔴

18/05/2026

🚩🚩மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ( CPIM ) குடிமங்கலம் ஒன்றியம் கோட்டமங்கலம் கிராமத்தில் குடிதண்ணீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தண்ணீர் குடத்துடன் முற்றுகை போராட்டம் கோபாஆவேசத்துடன் துவங்கியது வெல்லட்டும் மக்கள் கோரிக்கை...🚩🚩

🚩தமிழக அரசே திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோட்டமங்கலம் ஊராட்சியில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பா...
18/05/2026

🚩தமிழக அரசே திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோட்டமங்கலம் ஊராட்சியில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு.. வாரக்கணக்கில் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் பல நூறு குடும்பங்கள் ...
குடிக்க குளிக்க சமைக்க துவைக்க கழுவ தண்ணீரின்றி தவிக்கும் அவலத்தை போக்க நடவடிக்கை எடுக்காத வேடிக்கை பார்க்கும் குடிமங்கலம் ஒன்றிய கோட்டமங்கலம் ஊராட்சி நிர்வாகங்கள்...

தீர்வைத் தேடி பொதுமக்களே காலி குடங்களோடு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிப்பு ..

கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை நிர்வாகங்கள் போராடும் மக்களை உடுமலைப்பேட்டை துணை கண்காணிப்பாளர் மூலம் காவல்துறையை வைத்து மிரட்டும் அராஜகம்..
குடிநீர் கொடுக்க வழி செய்யாத குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தையும் காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசே திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோட்டமங்கலம் ஊராட்சியில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு.. வாரக்கணக்கில் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் பல நூறு குடும்பங்கள் ...
குடிக்க குளிக்க சமைக்க துவைக்க கழுவ தண்ணீரின்றி தவிக்கும் அவலத்தை போக்க நடவடிக்கை எடுக்காத வேடிக்கை பார்க்கும் குடிமங்கலம் ஒன்றிய கோட்டமங்கலம் ஊராட்சி நிர்வாகங்கள்...

தீர்வைத் தேடி பொதுமக்களே காலி குடங்களோடு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிப்பு ..

கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை நிர்வாகங்கள் போராடும் மக்களை உடுமலைப்பேட்டை துணை கண்காணிப்பாளர் மூலம் காவல்துறையை வைத்து மிரட்டும் அராஜகம்..
குடிநீர் கொடுக்க வழி செய்யாத குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தையும் காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மிரட்டல் அறிக்கையை ஒட்டி செல்லும் காவல்துறையின் அத்துமீறல்..
வன்மையாக
கண்டிக்கிறோம். மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்.
பிரச்னைக்கு தீர்வுகண்டிடு..🔴

தமிழக அரசே உடனடியாக தலையிட்டு கோட்டமங்கலம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடு..
புதிய அரசாங்கத்துக்கு கெட்ட பேரை உருவாக்கக்கூடிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின்மீதும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் நடவடிக்கைக்கு உத்தரவிடு கடுமையான நடவடிக்கை எடுத்திடு
என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடிமங்கலம் கமிட்டியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .
18.5.26🔴

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மிரட்டல் அறிக்கையை ஒட்டி செல்லும் காவல்துறையின் அத்துமீறல்..
வன்மையாக
கண்டிக்கிறோம். மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்.
பிரச்னைக்கு தீர்வுகண்டிபிடு..🔴

தமிழக அரசே உடனடியாக தலையிட்டு கோட்டமங்கலம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடு..
புதிய அரசாங்கத்துக்கு கெட்ட பேரை உருவாக்கக்கூடிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின்மீதும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் நடவடிக்கைக்கு உத்தரவிடு கடுமையான நடவடிக்கை எடுத்திடு
என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடிமங்கலம் கமிட்டியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .
18.5.26🔴

CPIM Tamilnadu CPIM Kerala இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் கெத்து..மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் வாடகை...
12/05/2026

CPIM Tamilnadu
CPIM Kerala

இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் கெத்து..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் வாடகை வீட்டில் ...

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால் அரசு இல்லத்தை காலி செய்தார் கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் குடியேறினார்

12/05/2026
717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு போதையற்ற தமிழ்நாடு என்கிற வாலிபர் சங்கத்தின் கோரிக்கையில் ஒரு ...
12/05/2026

717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று
தமிழக அரசு அறிவிப்பு

போதையற்ற தமிழ்நாடு என்கிற வாலிபர் சங்கத்தின் கோரிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி!

மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!

DYFI வரவேற்கிறோம்

#போதையற்ற_தமிழ்நாடு

CPIM உடுமலைப்பேட்டை 12.5.26.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலக்குழு முடிவுகளை விளக்கி கிளைச்செயலாளர்கள், இடைக்கமிட...
12/05/2026

CPIM உடுமலைப்பேட்டை
12.5.26.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலக்குழு முடிவுகளை விளக்கி கிளைச்செயலாளர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள்,
மாவட்ட ப்ராக்சன் உறுப்பினர்களுக்கான கூட்டம் உடுமலை கட்சிஅலுவலகம் ஸ்டாலின்நிலையத்தில் நடைபெற்றது.

உடுமலைநகரச் செயலாளர் K.தண்டபாணி தலைமைதாங்கினார்.

உடுமலைஒன்றியம் மடத்துக்குளம், குடிமங்கலம் செயலாளர்கள் S.ஜெகதீசன், R.V.வடிவேல் N.சசிகலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.கனகராஜ் வரவேற்றார்.
அரசியல் நிலைமைகளையும்
மாநிலக்குழு முடிவுகளையும் விளக்கி மாநிலசெயற்குழு உறுப்பினர் தோழர்.G.சுகுமாறன் அவர்கள் ரிப்போர்ட்டிங் செய்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் K.காமராஜ், திருப்பூர் மாவட்டச்செயலாளர் C.மூர்த்தி, செயற்குழு S.R.மதுசூதனன் ஆகியோர் கட்சியின் உடனடி பணிகள் குறித்து உரையாற்றினர்.

நிறைவாக மாவட்டக்குழு உறுப்பினர் நன்றிதெரிவித்து பேசினார்.
இதில் உடுமலைஒன்றிய, நகர, மடத்துகுளம், குடிமங்கலம் தாராபுரம் கமிட்டிகளின் கிளைச்செயலாளர்கள் கமிட்டிஉறுப்பினர்கள் ப்ராக்சன்உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.🔴

717 மதுபான கடைகளை( டாஸ்மாக்கை ) மூட உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..Cong...
12/05/2026

717 மதுபான கடைகளை( டாஸ்மாக்கை ) மூட உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Congratulations CM Sir..

Address

முதல் தளம், ஸ்டாலின் நிலையம்
Udumalpet
641126

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Udumalai Rural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share