DYFI Udumalai Rural

DYFI Udumalai Rural எல்லோருக்கும் கல்வி..
எல்லோருக்கும் வேலை...

23/06/2026

முரசொலியில் தன் ஏவல் வளர்ப்பு பிராணியை ஏவி, தோழர்.பி.சண்முகத்தை கடித்திட ஆவண செய்துள்ளாரா முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

அந்த திருமாவேலன் எனும் பச்சோந்தி பிறவிக்கெல்லாம் அறம் பற்றி பேச ஏதாவது தகுதியுள்ளதா?

திமுகவின் தோல்விக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் தோல்விக்கும் கட்சி கடந்த பலரிடம் அனுதாபம் உள்ளது. அந்த அனுதாபத்தை அழிக்க முற்படுகிறார்கள் இந்த காரியகார திருமாவேலன்கள்!

அமித்ஷா ஆதரவோடு அதிமுக கூட்டு என்ற தங்களின் திட்டம் வெளியாகிவிட்டதே என்ற வயிற்றெரிச்சலில், பி.ராமமூர்த்தி வரை சென்று கதறியிருக்கிறார் இந்த கோபாலபுரத்து கொத்தடிமை!

மைத்ரேயன் எனும் சங்கீயை கட்சியில் பொறுப்பில் வைத்துள்ள திமுகவிற்கு பார்ப்பன எதிர்ப்பு பேச ஏதாவது தகுதி உள்ளதா?

பெ.சண்முகத்தின் உண்மை முகம் என கட்டுரை எழுத தொடங்கியிருக்கும் அந்த அறிவாலய அல்லக்கைக்கு ஒரே ஒரு வேண்டுகோள்'

கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கை புடலங்காய் எதுவுமில்லை என முடிவு கண்டிருக்கும் நீ,

அதிமுக ஆட்சிக்கு ஆதரவு தாருங்கள் என மு.க.ஸ்டாலின் கோரியது என்ன மாதிரியான கொள்கை புடலங்காய்? கத்திரிக்காய்? என்பதை விரிவாக விளக்கவும்.

இன்று மாலை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரணிக்கு  வாரீர்
23/06/2026

இன்று மாலை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரணிக்கு வாரீர்

23/06/2026

தமிழ்நாடு தென்னை
விவசாயிகள் சங்கம்

தென்னை விவசாயிகளே கட்டாயம் பங்கேற்கவும்..
21/06/2026

தென்னை விவசாயிகளே கட்டாயம் பங்கேற்கவும்..

21/06/2026
நீட் தேர்விற்கு எதிராக போராடிய SFI தோழர்கள் மீது சென்னை காவல்துறை கடும் தாக்குதல்!DYFI கடும் கண்டனம்!
21/06/2026

நீட் தேர்விற்கு எதிராக போராடிய SFI தோழர்கள் மீது சென்னை காவல்துறை கடும் தாக்குதல்!

DYFI கடும் கண்டனம்!

சம்பவக்காரர் சண்முகம்!தம்பி, இப்ப தான், அவரு சிபிஎம்-க்குமாநிலச் செயலாளரு. அவரு SFI காலத்துல இருந்தே சம்பவக்காரருப்பா. இ...
21/06/2026

சம்பவக்காரர் சண்முகம்!

தம்பி, இப்ப தான், அவரு சிபிஎம்-க்கு
மாநிலச் செயலாளரு. அவரு SFI காலத்துல இருந்தே சம்பவக்காரருப்பா.

இணைய உ.பி.க்களுக்கு
இதெல்லாம் எங்க தெரியப் போவுது?!😂

ஏய்... நீங்க படிச்ச ஸ்கூல்ல;
நாங்க ஹெட் மாஸ்டர்டா மொமென்ட்!

21/06/2026

தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தமைக்காக சிபிஎம் தோழர் பி.சண்முகத்தை செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது நடந்த வாச்சாத்திகொடுமையின் நினைவு நாளை வைத்துகேலி செய்யும் கூட்டமே...
அதற்காக தொடர் போராட்டத்தில் நீதி பெற்றுகொடுக்க முன்னே நின்றவர் தோழர் பி.சண்முகம் தான்.சிபிஎம் கட்சி தான். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தான்.

கீழ் வெண்மணி படுகொலை நடக்கும் போது திமுக ஆட்சி நடந்தது. ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஆதரவாக இல்லை நில உடமைதாரர்களுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தது. தோழர் வி.பி.சிந்தனை உடம்பு முழுவதும் கத்தியால் குத்தியது படுகொலை செய்ய முயற்சித்தது திமுகவே மற்றும் மதுரை லீலாவதியை படுகொலை செய்தது திமுக வட்டச் செயலாளர் தண்ணீர் லாரியில் மாமுல் வாங்க முடியவில்லை என்ற காரணத்தால் ... மாஞ்சோலை தொழிலாளர்களை கொன்றொழித்தது தாமிரபரணிநதியில்.. அரசேநடத்திய கொலைகள்...என நிறையவே வேதனைகள் கடந்த ஆட்சியின் வேங்கைவயல் வரை... இத்தனைக்கும் பிறகும் உங்களோடு தேர்தல் உடன்பாடு காணும் போதும் மக்கள் நலனே முன் நின்றது.

எச்சில் துப்பும் போது பாத்து துப்புங்க மல்லாந்து படுத்து துப்பாதீங்க அது நம்ம மேலயும் படும்.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையின் அராஜக தாக்குதல்: இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம...
20/06/2026

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையின் அராஜக தாக்குதல்: இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்!

மத்திய கல்வி அமைச்சகத்தின் அலட்சியத்தால் வஞ்சிக்கப்படும் மாணவர் சமூகத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் இன்று (20/06/2026) ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் அனைத்து தோழர்களும் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என காவல்துறையுடனான புரிந்துணர்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், எமது அமைப்பின் தோழர்கள் பயணித்த பேருந்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் வந்தபோது, காவல்துறையினர் மிக அராஜகமான முறையில் பேருந்தை அடித்து நிறுத்தினர். பேருந்தை விட்டு வெளியே இறங்கி தோழர்களை, காவல்துறை அராஜகமான முறையில் கைது செய்ய முற்பட்டது.

காவல்துறையினர் நடத்திய இந்த கொடூர தாக்குதலில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தோழரின் தோள்பட்டை இறங்கியுள்ளது. அதைவிட அநாகரிகமாக, எமது அமைப்பின் பெண் தோழர்களை ஆண் காவலர்கள் தகாத முறையில் கையாண்டு, அவர்களின் ஆடையைப் பிடித்து இழுத்து கைது செய்துள்ளனர். மேலும், சட்டத்திற்குப் புறம்பாக காவலர்கள் தங்களது சீருடையில் பெயர் வில்லைகளை (Badges) அணியாமல் தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.

நாளை மறுநாள் நீட் மறுதேர்வு நடக்கவிருக்கும் சூழலில், இன்னும் பல மாணவர்களுக்கு அனுமதிச்சீட்டு (Admit Card) கிடைக்காத அவல நிலை நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவில் வசிக்கும் ஒரு மாணவருக்கு, தேர்வு எழுதும் மையம் அபுதாபியில் ஒதுக்கப்பட்டிருக்கும் கொடுமையும் அரங்கேறியுள்ளது. இந்த தேர்வு குளறுபடிகளாலும், மத்திய அரசின் அலட்சியத்தாலும் ஏற்பட்ட மன உளைச்சலால் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் நீதித்திற்காகவும் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது, மிக மோசமான முறையில் வன்முறையை ஏவி தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் இந்த அடாவடித்தனமான போக்கை இந்திய மாணவர் சங்கம் (SFI) வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர் உரிமைகளுக்கான எமது போராட்டம் இத்தகைய அடக்குமுறைகளால் ஒருபோதும் ஒடுங்கிவிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநிலத் தலைவர்
சி. மிருதுளா

மாநிலச் செயலாளர்
தௌ. சம்சீர் அகமது

Address

முதல் தளம், ஸ்டாலின் நிலையம்
Udumalpet
641126

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Udumalai Rural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share