19/05/2026
அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகள் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கல்லூரியில் இந்த ஆண்டு 2026-2027 ம் ஆண்டிற்கான ஐடிஐ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவர்களை பதிவு பெற்ற தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க www.skill training.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜூன் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9499055612, 9499055642 ஆக எண்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யது கொள்ளவும். மாணவர்கள் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள்
1. மார்க் சீட்
2. மாற்றுச் சான்றிதழ்
3. ஆதார் அட்டை
4. 2 புகைப்படம்
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச சலுகைகள்
1. மடிக்கணினி
2. ரூ .750/- மாதாந்திர உதவித் தொகை
3. ரூ.1000/- தமிழ் புதல்வன்/புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் (மாதந்தோறும்)
4. வரைபடக் கருவிகள் & பாடப் புத்தகங்கள்
5. சீருடைகள் 2 செட் & ஷூ (காலணி)
6. பஸ் பாஸ் & மிதிவண்டி
ஆகியவை வழங்கப்படுகிறது.
மேற்கண்ட விவரங்களை அரசு தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வர் தொிவித்துள்ளார்.
நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் குழந்தைகள் கல்லூரியில் சேர்ந்து பயனடையுமாறு தொிவித்துக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
தொழிலாளா் உதவி ஆணையா்
(சமூக பாதுகாப்புத் திட்டம்)
திருப்பூர்