13/08/2026
உடுமலைப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனம் மற்றும் அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி காரத்தொழுவைச் சேர்ந்த புரோக்கர் சிவக்குமார் என்பவர் ₹5,000 முதல் ₹7,000 வரை லஞ்சமாகப் பணம் கேட்டுப் பறிக்க முயற்சி செய்யும் அநீதியில் ஈடுபட்டு வருகிறார்.
பணம் தர மறுப்பவர்கள் மற்றும் தன் பேச்சைக் கேட்காதவர்கள் மீது அரசு அதிகாரிகளுக்குப் பொய்யான புகார் கடிதங்களை அனுப்பி, மன உளைச்சலையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும், அந்த நபர் தங்கள் மீதும் பொய்ப் புகார் அளித்து விடுவாரோ என்ற அச்சத்தில், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து மெத்தனப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது.
மேலும், தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ், கணேஷ் போன்ற ஆபத்தான புகையிலைப் போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து, தனது இருசக்கர வாகனத்திலேயே சட்டவிரோதமாக உலாவவிட்டு விற்பனை செய்து வருகிறார் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளிடம் லஞ்சம் கேட்டுப் பணம் பறிக்க முயலும் புரோக்கர் சிவக்குமார் மீது சட்டபூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவக்குமார் சட்டவிரோதமான முறையில் பெற்றிருக்கும் ஓட்டுநர் உரிமத்தை (Driving License) அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கணேஷ் போன்ற போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்துப் பகிரங்கமாக விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்தி, அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட நபர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாள்: 21.08.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: காலை 10:00 மணி
இடம்: வட்டாட்சியர் அலுவலகம் உடுமலைப்பேட்டை
மாற்றுத்திறனாளி நலத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து மேற்கண்ட நபர் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.