27/03/2026
அன்றில் இலக்கியச் சுற்றம் வருகிற நவம்பரோடு பனிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்து பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
* 5 விருது வழங்கும் விழாக்கள்
* 6 இளையோர் இலக்கிய விழாக்கள்
* பட்டிமன்றங்கள்/ வழக்காடு மன்றங்கள்/ கவியரங்குகள்
* 50 மாதாந்திரக் கூடல்கள்
என்று அன்றில் நீண்ட பாதையைக் கடந்து வந்திருக்கிறது..
அன்றிலின் சிறகுகள் தேனி மாவட்டத்தில் மட்டுமின்றி வெளி நாடுகளில்/ வெளி மாநிலங்கள் & மாவட்டங்களில் நிறைந்திருக்கின்றனர்..அவர்களுடனும் உரையாடுவதற்காக கொரோணா காலத்தில் நான்கு இணைய நிகழ்வுகளை நடத்தினோம்..பிறகு அதனைத் தொடர முடியவில்லை..பலரும் கேட்டுக் கொண்டதால் மீண்டும் இணைய நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்..
நாளை மாலை 6.30 முதல் 8 மணி வரை zoom வழியாக இணைய நிகழ்வு நடைபெறவிருக்கிறது..
இந்த மாதம் திருக்குறள் கருத்தரங்கம்
எழுத்தாளர் கோ. கமலக்கண்ணன்
'உயிர் கலந்த உயர்மறை ' என்கிற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்..
எங்கள் மாணவர் அப்சல் அகமதுவும் சிற்றுரை நிகழ்த்தவிருக்கிறார்..
வாய்ப்பு இருப்பின் வாருங்கள்,.நிகழ்வுக்கான இணைப்பு முதல் பின்னூட்டத்தில்..