21/07/2026
நாடார் வம்சம் அறக்கட்டளை – தமிழ்நாடு கிளை
நாடார் வம்சம் அறக்கட்டளையின் தமிழ்நாடு கிளை, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக நலப் பணிகளையும் களப்பணிகளையும் தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மகாராஷ்டிரா தலைமை இடத்தின் ஆலோசனையின் பேரில், வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப் பள்ளியில் விழா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியின் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகளான திரு. பகத்சிங், திரு. சுந்தர் சிங், திரு. மணிமாறன், திரு. தர்மர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி மாணவ, மாணவியர்களும் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு மாண்பமை. கிறிஸ்டோபர் அவர்கள், 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கப் பரிசுகளை வழங்கி, காமராஜரின் கல்விச் சேவையையும் சமூகப் பணியையும் எடுத்துரைக்கும் சிறப்புரையாற்றினார்.
நாடார் வம்சம் அறக்கட்டளையின் தமிழ்நாடு மாநில தலைவர் ..... திரு.ராஜ் வெங்கடேசன் மற்றும் மாநில செயலாளர் திரு.தேவ ஹரிஷ் ஹட்சன் இவர்களுடன் திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகிகள் திரு.ஜோசப்,திரு.தாஸ் ,திரு.அனிஸ்டன்,திரு.விஜய், திரு.செல்வராஜ் அனைவரும் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து, ஒழுங்குமுறையுடன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
மேலும், தலைமை இடத்தின் நிர்வாகிகளான தலைவர் திரு. நா. ராஜன் நாடார், பொதுச் செயலாளர் திரு. தி. மனோஜ் குமார் நாடார், முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ. பி. ஸ்ரீனிவாசன் நாடார் ஆகியோரின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற முக்கிய காரணமாக அமைந்தன.
கர்மவீரர் காமராஜரின் கல்விச் சேவையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் நடைபெற்ற இவ்விழா, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, அனைவரின் மனதிலும் நீங்கா நினைவாக அமைந்தது.