Nadar Vamsam Trust

Nadar Vamsam Trust Nadar Vamsam Trust
Working for unity, education, social service, and the overall development of the Nadar community.

Serving society with values, culture, and commitment. Education | Social Welfare | Community Development

🇮🇳 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳நாடார் வம்சம் அறக்கட்டளை – NADAR VAMSAM Nadar Vamsam Trust சார்பாக அனைத்து இந்...
14/08/2026

🇮🇳 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳

நாடார் வம்சம் அறக்கட்டளை – NADAR VAMSAM Nadar Vamsam Trust சார்பாக அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🙏🇮🇳

நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் இந்த நன்னாளில் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறோம். 🙏

🇮🇳 ஒற்றுமை நம் அடையாளம்!
🇮🇳 சமுதாய நலனே நம் திசை!!
🇮🇳 முன்னேற்றம் நம் இலக்கு!!!

தேசப்பற்று, ஒற்றுமை, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்துடன் புதிய இந்தியாவை உருவாக்க ஒன்றிணைவோம்.

வந்தே மாதரம்! 🇮🇳
ஜெய் ஹிந்த்! 🇮🇳

– நாடார் வம்சம் அறக்கட்டளை
NADAR VAMSAM Nadar Vamsam Trust

#தமிழ்நாடு #நாடார் #நாடார்வம்சம் #காமராஜர் #சுதந்திரதினம் #ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம் 🇮🇳

24/07/2026
கர்மவீரர் பெருந்தலைவர் K. காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கல்விச் சேவையையும் மக்கள் நலப் பணிகளைய...
22/07/2026

கர்மவீரர் பெருந்தலைவர் K. காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கல்விச் சேவையையும் மக்கள் நலப் பணிகளையும் போற்றும் வகையில், மும்பை மலாடு பகுதி நாடார் சங்கம் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மலாடு பகுதி நாடார் சங்கத் தலைவர் திரு. ஐகோர்ட் ராஜா நாடார் மற்றும் சங்க நிர்வாகிகள் விடுத்த அழைப்பை ஏற்று, மகாராஷ்டிரா மாநில நாடார் வம்சம் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவில் அறக்கட்டளையின் தலைவர் திரு. என். ராஜன் நாடார், பொதுச்செயலாளர் திரு. டி. மனோஜ் குமார் நாடார், முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ.பி. ஸ்ரீனிவாசன் நாடார், அமைப்புச் செயலாளர் திரு. பி. முத்துகிருஷ்ணன் நாடார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெருந்தலைவர் காமராஜரின் கல்வித் தொண்டை நினைவுகூரும் வகையில், மாணவ–மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பொருட்கள், எழுது பொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பெருந்தலைவர் காமராஜரின் புகழை போற்றும் இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்று இனிதே நிறைவடைந்தது.

பெருந்தலைவர் காமராஜர் சாலை பெயர்ப்பலகை திறப்பு விழாஇந்தியத் திருநாட்டின் தலைசிறந்த மக்கள் தலைவரும், கல்விப் புரட்சியின் ...
21/07/2026

பெருந்தலைவர் காமராஜர் சாலை பெயர்ப்பலகை திறப்பு விழா

இந்தியத் திருநாட்டின் தலைசிறந்த மக்கள் தலைவரும், கல்விப் புரட்சியின் நாயகனுமான கர்மவீரர் பெருந்தலைவர் கே. காமராஜர் அவர்களின் புகழை நிலைநிறுத்தும் வகையில், அவருடைய திருவுருவச் சிலைகள் நிறுவுதல் மற்றும் சாலைகள், நகரப் பகுதிகளுக்கு அவரது பெயரைச் சூட்டும் நிகழ்வுகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மும்பை செம்பூர் பகுதியில் உள்ள செல் காலனி – டக்கர் பாபா காலனி சந்திப்பில் "பெருந்தலைவர் காமராஜர் சாலை" பெயர்ப்பலகை திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு செம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரகாஷ் பதேர்பெட்கர் அவர்கள் தலைமை தாங்கினார். அப்பகுதி சமூக சேவகர்களான திரு. வி. மகராஜன் நாடார் மற்றும் திரு. ஜே. ஜாக்சன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, மகாராஷ்டிரா மாநில நாடார் வம்சம் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவில் அவைத் தலைவர் திரு. பி.என். நடராஜன் நாடார், தலைவர் திரு. என். ராஜன் நாடார், பொதுச்செயலாளர் திரு. டி. மனோஜ் குமார் நாடார், முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ.பி. ஸ்ரீனிவாசன் நாடார், அமைப்புச் செயலாளர் திரு. பி. முத்துகிருஷ்ணன் நாடார், நவி மும்பை தலைவர் திரு. வி.கே. சரவணன் நாடார் திரு.சேகர் நாடார் திரு கே. சரவணன் நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

பெருந்தலைவர் காமராஜரின் புகழை தலைமுறைகள் தோறும் நிலைநிறுத்தும் இவ்விழா, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சிறப்பாக நிறைவடைந்தது.

நாடார் வம்சம் அறக்கட்டளை – தமிழ்நாடு கிளைநாடார் வம்சம் அறக்கட்டளையின் தமிழ்நாடு கிளை, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு ...
21/07/2026

நாடார் வம்சம் அறக்கட்டளை – தமிழ்நாடு கிளை

நாடார் வம்சம் அறக்கட்டளையின் தமிழ்நாடு கிளை, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக நலப் பணிகளையும் களப்பணிகளையும் தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மகாராஷ்டிரா தலைமை இடத்தின் ஆலோசனையின் பேரில், வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப் பள்ளியில் விழா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதியின் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகளான திரு. பகத்சிங், திரு. சுந்தர் சிங், திரு. மணிமாறன், திரு. தர்மர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி மாணவ, மாணவியர்களும் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு மாண்பமை. கிறிஸ்டோபர் அவர்கள், 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கப் பரிசுகளை வழங்கி, காமராஜரின் கல்விச் சேவையையும் சமூகப் பணியையும் எடுத்துரைக்கும் சிறப்புரையாற்றினார்.

நாடார் வம்சம் அறக்கட்டளையின் தமிழ்நாடு மாநில தலைவர் ..... திரு.ராஜ் வெங்கடேசன் மற்றும் மாநில செயலாளர் திரு.தேவ ஹரிஷ் ஹட்சன் இவர்களுடன் திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகிகள் திரு.ஜோசப்,திரு.தாஸ் ,திரு.அனிஸ்டன்,திரு.விஜய், திரு.செல்வராஜ் அனைவரும் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து, ஒழுங்குமுறையுடன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மேலும், தலைமை இடத்தின் நிர்வாகிகளான தலைவர் திரு. நா. ராஜன் நாடார், பொதுச் செயலாளர் திரு. தி. மனோஜ் குமார் நாடார், முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ. பி. ஸ்ரீனிவாசன் நாடார் ஆகியோரின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற முக்கிய காரணமாக அமைந்தன.

கர்மவீரர் காமராஜரின் கல்விச் சேவையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் நடைபெற்ற இவ்விழா, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, அனைவரின் மனதிலும் நீங்கா நினைவாக அமைந்தது.

Address

90 Feet Road
Mumbai
400017

Alerts

Be the first to know and let us send you an email when Nadar Vamsam Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share