17/06/2026
கடந்த ஞாயிற்றுக்கிழமை, உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற 27வது ஆண்டு கோடைக்கால சிறப்பு திருக்குறள் பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று திருக்குறளின் அறநெறிகளையும் வாழ்க்கை மதிப்புகளையும் கற்றுப் பயனடைந்தனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் தீக்ஷா உணவகம் மூலமாக உணவு வழங்கப்பட்டதும் எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இத்தகைய சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்து, குழந்தைகளிடம் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை வளர்த்து வரும் உலகப் பொதுமறை திருக்குறள் பேரவைக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“திருக்குறள் வழி வளர்க இளைய தலைமுறை; செழிக்கட்டும் தமிழ் பண்பாடு.” 🙏📖🌿
மருத்துவர். சூரியா சோபன் குமார் 🙏🏽🙏🏽