தென்தமிழகம் - ThenThamilagam

தென்தமிழகம் - ThenThamilagam கீரியாறு சீறிப் பாயட்டும்! தென் தமிழகம் துலங்கட்டும்!!

04/06/2026

Starting Wars Is Easy for the USA. Ending Them is the Hard Part!

American Strategy: Igniting Fire and Selling Fire Extinguishers.

The United States can start a war with remarkable speed and confidence.
Ending one, however, is often a very different story.

History has a habit of smirking whenever Washington speaks about bringing peace. Time and again, America has entered conflicts promising stability, democracy, or security, only to discover that wars are far easier to ignite than to extinguish.

The pattern is familiar. Peace talks may be taking place on one side of the table while military pressure, covert operations, or strategic maneuvering continue on the other. Trust, once lost, is difficult to restore. Yet this contradiction has become a recurring feature of American foreign policy.

Consider Vietnam. The world's most powerful military entered the conflict determined to stop communism. It left in haste, with helicopters evacuating personnel from Saigon in scenes that became symbols of strategic failure.

Then came Iraq. The promise was liberation, democracy, and a brighter future. The reality was years of instability, sectarian violence, and regional turmoil whose consequences are still being felt.

Afghanistan may be the most striking example. After two decades of war, trillions of dollars spent, and countless lives affected, the United States withdrew. Before the dust had settled, the Taliban were back in power. The famous "Mission Accomplished" declaration has become one of the great ironies of modern geopolitics.

Even Cuba tells a similar story. Just ninety miles from Florida, it has endured decades of sanctions, embargoes, and political pressure. Yet despite every effort, Washington never managed to bend Havana entirely to its will.

Today, many critics argue that the same script is unfolding once again in relation to Iran. America speaks of peace while presenting an ever-growing list of conditions. It often resembles a man breaking down a door while reassuring everyone inside that he has come to restore order.

Nor are military conflicts the only battlegrounds. Trade wars now stretch across much of the globe. China, Russia, India, the European Union, Canada — at times it seems easier to list America's economic rivals than its economic partners.

Which brings us to the slogan "Make America Great Again." Admirers see strength. Critics see something else: a nation that repeatedly mistakes confrontation for leadership.

War Economy: The belief that America prospers from war is one of the most persistent myths in modern politics. While certain industries and contractors may benefit, the broader economic record is far less convincing.

Sometimes one wonders whether the unofficial motto of modern American politics is not "Make America Great Again," but "Make America Fight Again."

While massive military spending can temporarily boost economic activity, most economists argue that wars ultimately destroy wealth, consume resources, and divert capital from more productive purposes. History suggests that building a lasting peace is often the greater challenge.

Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!

04/06/2026

எம்மை கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?

"இரண்டு தடவைக்கு மேலாக மந்திரி? மூன்று தடவைக்கு மேலாக MLA? Get Lost!"

இது நவீன அரசியல் அரிச்சுவடியில் பாலபாடம் - 1

It's a great recipe for a political backlash! பின்னே? அரசியல் அதிகாரம் என்பது பரம்பரை உரிமையில்லை! அது காங்கிரஸ் கற்றுத்தந்த பாடம். ஆனானப்பட்ட திமுகவாக இருந்தாலும் அதுதான் கதி.

"எடப்பாடிகளின் எதேச்சாதிகாரம் எப்போதும் செல்லாது."

இது நவீன அரசியல் அரிச்சுவடியில் பாலபாடம் - 2

திமுகவின் B டீம் அதிமுக. ஓர் அரசியல் விபத்தில் முதல்வரான எடப்பாடி அற்புதமாகக் காய்களை நகர்த்தி அடுத்த தேர்தல் வரை மட்டுமே காலத்தை ஓட்ட நினைத்தால் அது நியாயம். ஒரு சில தலைகளை கைக்குள் போட்டுக்கொண்டு கட்சியை மிரட்டல்களால் கட்டுக்குள் வைத்திருந்து ஆட்சியையும் வளைக்க நினைத்த அந்த நந்தவன ஆண்டியின் வியூகங்கள் கட்சியையே அழித்துவிட்டது.

திரை நட்சத்திரமான விஜய் தமிழக அரசியலிலே ஒரு துருவ நட்சத்திரமாகத் தோன்றி திராவிடக் கட்சிகளின் தீய வியூகங்களைத் தகர்த்தெறிந்து மேற்கண்ட ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்திவிட்டார்.

"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்பது தமிழ் கலாச்சாரத்தில் செருக்கு மற்றும் அகந்தையை அடக்கப் பயன்படும் ஒரு புகழ்பெற்ற சொலவடை ஆகும். இதன் மூலமானது மகாபாரதத்தின் 'வன பர்வத்தில்' மார்க்கண்டேய முனிவரால் தர்மருக்குக் கூறப்பட்ட கதையாகும்.

கொங்கண முனிவர், நீண்ட காலம் கடும் தவம் செய்து வந்தார். ஒருமுறை மரத்திலிருந்து தன்மீது எச்சமிட்ட கொக்கை அவர் கோபத்தால் பார்த்த பார்வையில் கொக்கு எரிந்து சாம்பலானது. இதனால் தனக்கு அதீத சக்தி இருப்பதாக அவர் கர்வம் கொண்டார். ஒரு நாள் பிச்சை எடுக்கச் சென்றபோது, ஒரு பெண்மணி தன் கணவனுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். எனவே, அதன் பொருட்டு தாமதமாகும் என்பதால் முனிவரை காத்திருக்கச் சொன்னாள்.

கோபத்துடன் முனிவர் அவளைப் பார்க்க, அப்பெண், "என் கற்பின் சக்தியை அறியாமல், மரத்திலிருந்த கொக்கை எரித்ததைப் போல என்னையும் எரித்துவிடலாம் என்று எண்ணினாயோ கொங்கணவா?" என்று வினவினாள். தான் செய்த தவறை உணர்ந்த முனிவர், அவளிடம் மன்னிப்பு கேட்டார்.
"சாதாரணமானவர்கள் என்று அலட்சியமாக எடைபோட்டு விடாதீர்கள்" என்ற அர்த்தத்தில் இந்தப் பழமொழி பயன்படுத்தப்படுகிறது.

2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்த போது, கலைஞர் தமிழர்களை "சோற்றால் அடித்த பிண்டங்கள்" என்று ஏகத்துக்கும் பேசினார். அது அப்போது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழர்கள் 2026 தேர்தலில் தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று காட்டிவிட்டார்கள்.

"தெய்வம் நின்று கொல்லும்" என்பது நாட்டில் பேச்சுவழக்கு. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. தெய்வம் என்றால் இறைவன்தானே? எனவே, "இறைவன் தனது வேலையை காட்டிவிட்டான்!" என்றும் சொல்லலாம்!

உங்கள் அதிகாரத்தை உமது கட்சிக்காரர்களிடம் வைத்துக் கொள்ளுங்கள் எம்மிடம் காட்டவேண்டாம். மாறி மாறி நீங்கள்தான் முறை வைத்து நாட்டினை ஆளவேண்டுமா? எம்மை கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?என்ற ரீதியில் மக்கள் திராவிடக் கட்சிகளை கேட்காமல் கேட்டுவிட்டார்கள்!

#திமுக #தவெக #விஜய் #ஸ்டாலின் #உதயநிதி #அரசியல் #2026தேர்தல் #காங்கிரஸ்

Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!

03/06/2026

அடுத்தடுத்த தேர்தல்கள்: மில்லியன் டாலர் கேள்வி என்ன?

இடைத்தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்
பாராளுமன்ற தேர்தல்

ஆகியவை அடுத்தடுத்து தமிழகத்தில் வரும் நிலையில் அதை எண்ணி திமுக பீதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், அதிமுகவில் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட ஆளில்லை என்பதே உண்மை. எடப்பாடி இருக்கும் வரை கட்சியில் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க நேரம் இல்லை. அவருக்கு உள்கட்சி எதிரிகளை சமாளித்து கட்சித் தலைவராகத் தொடர்ந்தால் போதும்.

ஆனால், திமுகவின் நிலை அப்படி இல்லை. கட்சியை புனரமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மாற்றங்களுக்கேற்ப கட்சியின் நிர்வாகத்தையும் வியூகங்களையும் மாற்றி அமைக்காவிட்டால் கட்சி கற்பூரம் போலக் காற்றில் கரைந்துபோக வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பேச்சு!

அதே சமயயம், இருக்கிற கட்டமைப்பை மாற்றி அமைக்கும்போது எதிர்ப்புகள் எழும் என்பதால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களை துணிவுடன் சமாளிப்பதும் கடினம். அதாவது கட்சியின் நிலை இன்று இருதலைக்கொள்ளி எறும்பாக இருக்கிறது. எதிர்வரும் இடைத் தேர்தல்களில் திமுகவின் சாயம் வெளுத்துவிடும் என்ற பயம் இருப்பதால், திமுக போட்டி போடுவதே சந்தேகம் என்றும் சொல்லப்படுகிறது

தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜெபி காலங்காலமாக பின்பற்றிய உத்தியையே வரப்போகிற எல்லா தேர்தல்களிலும் பின்பற்றப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை! அது வேறு ஒன்றும் இல்லை; யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்வதே!

பிஜெபி ஒருவேளை அண்ணாமலையின் தலைமையில் தனியாகவோ அல்லது அதிமுக தவிர்த்த பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ செயல்பட்டிருந்தால் இன்று பிஜெபி ஓரளவு வலுவடைந்திருக்கும், இப்படி ஒரு கேவலமான தோல்வியை சந்தித்திருக்காது.

ஒரு விஷயத்தை பலரும் பேசுவது இல்லை. அதாவது 2026 தேர்தலில், கைக்கட்டாகவும் கால்க்கட்டாகவும் அமைந்த பாஜக மற்றும் அதிமுகவை வைத்துக்கொண்டும், டாக்டர் ராமதாசை எதிர்த்துக்கொண்டும் பாமக பெற்ற வெற்றி சாதாரணமானதில்லை.

ஒருவேளை அதிமுகவைத் தவிர்த்து அண்ணாமலை தலைமையில் பாமக போன்ற கட்சிகளுடன் பிஜெபி கூட்டணி அமைத்து வேலை செய்திருந்தால் நிலைமை இதைவிட மோசமாக போயிருக்குமா? நிச்சயம் இல்லை, கணிசமான இடங்களில் வென்றிருப்பார்கள்.

காங்கிரஸ் போன பாதையிலேயே அடி பிறளாமல் அப்படியே சென்று, எடப்பாடி தலைமையில் தவெகவிற்கு ரத்தினக் கம்பளம் போட்டு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த பெருமை பிஜெபி-யைத்தான் சேரும்.

அதனால்தான், பிஜெபியுடன் பயணித்தால் தனக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து அண்ணாமலை "என்வழி தனிவழி" என்று புறப்பட்டுவிட்டதாக சொல்லப் படுகிறது. மேலும் தமிழகத்தில் பிஜெபியின் சாயம் மாறுவது போலத் தெரியவில்லை என்று மோடியின் அபிமானிகளே நினைக்கிறார்கள்.

அடுத்தடுத்து வரப்போகிற தேர்தல்களில் தவெக தனது பலத்தை நிரூபித்துவிட்டால் கிட்டத்தட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்டம் குளோஸ் என்று சொல்லலாம். காங்கிரசைப் பொறுத்த அளவில் சவாரிக்கு தவெக இருக்கிறது. பிஜெபி என்ன செய்யப்போகிறது? அதைவிட அண்ணாமலை என்ன செய்யப்போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

03/06/2026

இது வரவேற்கத்தக்க மாற்றமே!

“படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்” என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் ஒன்றாகும். படித்தவன் திருடமாட்டான், வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான், கோவில் பூசாரி யோக்கியமானவன், சாமியார்கள் நல்லவர்கள் என்பதைப்போல, அரசியல் வாரிசுகளே ஆளத் தகுதியானவர்கள் என்று சொல்வதும் ஒரு மூட நம்பிக்கை அல்லது ஏமாற்று வேலைதான்.

ஊடகங்களில் விஜய்யின் படிப்பு மற்றும் சினிமா பின்புலத்தை வைத்து தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் பதிவுகள் தற்போது அதிகம் வலம் வருகின்றன. செய்கிற தொழிலை வைத்து ஒருவரை இழிவு படுத்திப் பேசுகிறவர்கள் எப்படி நியாயவான்களாக இருக்க முடியும்? அடுத்தவர்களின் திறமையைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு அதில்தான் திறமை!

விஜய் லயோலா கல்லூரி 'Dropout' என்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? இதுதான் இவர்களின் அரிய கண்டுபிடிப்பு. முழுநேர நடிப்பில் இறங்கிய அவர் படிப்பை பாதியில் நிறுத்துவதில் என்ன கேவலம்? அரசியலுக்கு வர அது ஒரு தகுதிக் குறைவா? பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பர்க், முகேஷ் அம்பானி, ஸ்டீவன் ஸ்பீல்பர்க், தீபிகா படுகொனே போன்ற சாதனையாளர்கள் Dropouts தான்! படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்றும் ஒரு சொலவடை உண்டு.

மக்களை ஒன்றிணைப்பது ஜனநாயகத்தில் உள்ள மிகப்பெரிய சவால். ஒரு முடியாட்சியிலோ அல்லது சர்வாதிகார ஆட்சியிலோ அது எளிது. ஜனநாயகத்தில் வென்று தலைமை ஏற்பதற்கு படிப்பு, பணபலம், தொழில் பின்புலம் ஆகியவை மட்டும் இருந்தால் போதாது; மக்கள் ஆதரவு வேண்டும். கிடைத்த ஆதரவை நிலைநிறுத்திக் கொள்ள நேர்மையும் செயல்திறனும் அவசியம்.

"சினிமா கவர்ச்சியால் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்" என்பதே நேற்று MGR இன் மீதான விமர்சனமாக இருந்தது. காலங்காலமாக மக்களிடம் நல்ல சிந்தனைகள், நாட்டுப்பற்று, தெய்வபக்தி ஆகியவற்றை வளர்ப்பதற்கு புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் ஆகியவை உருவாயின, நாடகங்கள் நடத்தப்பட்டன. கலைஞர்கள் மதிக்கப் பட்டனர்.

நடிப்பு என்பது ஒரு தொழில். சிறந்த கலைஞர்கள் மக்களால் போற்றப்படுகிறார்கள். நடிகர்களுக்கு நாடாளும் திறமை இல்லை என்பது அபத்தம். திறமை இல்லாத ஒருவர் (விஜய்) போட்டியும் பொறாமையும் மிகுந்த சினிமா உலகில் 51 வயதில் 69 படங்களில் நடித்து, அதில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணியில் இருக்கமுடியாது. அதே சமயம், ஊழல் புரிவதில் திறமையானவர்களால் ஜனநாயகம் அழிந்து நாசமானது கண்கூடு.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தவர். முன்னாள் கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் ஒரு தையல் தொழிலாளி. பிறகு தென்னை நார் தொழிற்சாலையிலும் தொழிலாளியாகப் பணியாற்றியுள்ளார். அவர்களுக்கெல்லாம் தகுதியும் திறமையும் இல்லை என சொல்வது அபத்தம் அல்லவா?

காமெடி நடிகரான ஜெலன்ஸ்கி உக்ரெய்னின் அதிபரானார். தற்போது ஆனானப்பட்ட வல்லரசான ரஷ்யாவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார். நாட்டை ஆள்வதற்கு நாணயமாகவும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற மனப்பான்மையும் தேசபக்தியுமே முக்கியம். இன்றைய தலைவர்களில் அப்படி எத்தனை பேர் உள்ளனர்?

விஜய் அவர்களால் இன்று இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது பெரிய விஷயம். ஏராளமான இளைஞர்கள் இன்று அரசியலில் பங்காற்றுகிறார்கள். செங்கோட்டையன் மற்றும் ஜெசிடி பிரபாகரைத் தவிர தவெகவில் அனைவரும் புதுமுகங்கள், இளைஞர்கள். ஊழல்கறை படியாதவர்கள். இது வரவேற்கத்தக்க மாற்றமே!

#விஜய் #முகேஷ்அம்பானி #பில்கேட்ஸ் #ஸ்டீவ் ஜாப்ஸ் #மார்க் ஜூக்கர்பர்க் #ஸ்டீவன் ஸ்பீல்பர்க்

Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!

03/06/2026

விஜய் ஆட்சியில் தென்னை பனை விவசாயிகளுக்கு விடிவுகாலம் உண்டா?

தமிழகத்தில் மட்டும்தான் கள்ளுக்குத் தடை விதித்து தென்னை மற்றும் பனை விவசாயிகளுக்கு திராவிட அரசுகள் துரோகம் செய்துவந்தன. அற்குக் காரணம் திராவிடக்கட்சியை சேர்ந்தவர்களே சாராய ஆலை அதிபர்களாக இருப்பதுதான்.

விஜய் ஆட்சியில் தென்னை பனை விவசாயிகளுக்கு விடிவுகாலம் உண்டா?

02/06/2026

அண்ணாமலை புதிய கட்சி: திராவிட விஷச்சுழல் ஓயட்டும்!

தேசியக் கட்சிகள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வளர்வதில் பல சிக்கல்கள் உள்ளன. தற்போது, அண்ணாமலை பிஜெபி இல் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்படி இருந்தால் அந்த முடிவுக்கு இந்த சிக்கல்கள் மட்டும் காரணம் இல்லை. மாநில அளவில் தலைமைக்கு ஸ்திரத்தன்மை இல்லை என்பதும் முக்கியமான காரணமாகும்.

தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பிரச்சினைகள் பிற மாநிலங்களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டவை மற்றும் மாறுபட்டவை.

இவை போக காவேரி, மீனவர் பாதுகாப்பு, மும்மொழிக் கொள்கை, கச்சத்தீவு, போன்ற தமிழ்நாட்டுக்கே உரித்தான தீராத பிரச்சினைகள் பல உள்ளன.

இவற்றுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினை போன்ற கலாச்சார ரீதியான பல்வேறு தனித்தன்மை வாய்ந்த வேறுபாடுகளும் உள்ளன.

இந்த எல்லா பிரச்சினைகளிலும் மாநிலத் தலைமை மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையும் தமிழகத்தில் நிலவுகிறது.

இவையெல்லாம் தேசியக் கட்சிகள் தமிழகத்தில் வளர்வதில் உள்ள சிக்கல்கள். இவை முன்னேபோனால் முட்டும், பின்னே வந்தால் உதைக்கும். இவற்றை தேசியக் கட்சிகள் திறம்பட கையாள்வது கடினம்.

சமூக வலைத்தளங்களின் தாக்கம் தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் அதிகரித்துக்கொண்டு வருவதால், உப்புசப்பில்லாத பிரச்சினைகள்கூட மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எதிர்பாராத பொதுக்கருத்துகளை உருவாக்கிவிடுகின்றன.

அடுத்து மாநில அளவில் தலைமைக்கு ஸ்திரத்தன்மை இல்லை என்பதும் தேசியக் கட்சிகள் தமிழகம் போன்ற மாநிலங்களில் வளரமுடியாமல் போவதற்கு முக்கியமான காரணமாகும். இதை தேசியக் கட்சிகளான பாரதீய ஜனதாவும் காங்கிரசும் உணர்ந்ததாகத் தெரியவில்லை, அல்லது பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போன கதை.

சில சமயங்களில் மாநிலத் தலைவர்கள் செல்வாக்குடன் வளர்வதை மத்தியத் தலைமை விரும்புவதும் இல்லை. அதனால்தான் "நியமனத் தலைவர்கள் நடைமுறை" இன்னும் செயல்பாட்டில் உள்ளது. அதற்கு முடிவே இல்லை.

அண்ணாமலை மீண்டும் தலைவரானாலும் நீண்டகாலம் அந்தப் பதவியில் தொடரமுடியாது. மாவட்டத் தலைவர்கள் நியமனத்தில், வேட்பாளர்கள் தேர்வில் கூட்டணி அமைப்பதில், மற்றும் கட்சி நிர்வாகத்தில், அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.

மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு மாநிலத்தலைவர் பதவியில் நீடிக்க முடிவதில்லை. ஒருமுறை ஏதோ ஒரு காரணத்தால் அப்பதவி பறிக்கப்பட்டால் மீண்டும் கிடைப்பது சாதாரணமில்லை. இந்தப் பின்புலத்தில் பார்த்தால் அண்ணாமலை மீண்டும் தலைவரானாலும், கட்சியில் தீவிரமாகச் செயல்படுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளன.

இன்றைய சூழலில் திராவிடக் கட்சிகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. பிரிவினை வாதம், கரை வேட்டி கலாச்சாரம் ஆகியவை மறைந்து வருகின்றன. ஆனால், கட்சி அமைப்பு வலுவாக உள்ள திமுகவிற்கு சீர்திருத்தங்களைச் செய்வதற்கு அவகாசம் கிடைத்தால் அது புத்துயிர் பெற வாய்ப்பு உள்ளது.

விஜய்க்கு அடுத்து தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்ற, 42 வயதே (June 4, 1984) ஆன இளம் தலைவர் அண்ணாமலை என்பதால் திமுக மீண்டும் எழுவதற்கு அவகாசம் தராமல் புதிய கட்சியைத் தொடங்கும் முனைப்பில் அவர் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அண்ணாமலையின் முயற்சி வரவேற்கத் தக்கதே. தமிழகம் மீண்டும் ஒரு விஷச்சுழலில் (Vicious cycle) சிக்குவதில் இருந்து முற்றிலுமாக தப்பிப்பதற்கு அது கூடுதல் உதவியாக இருக்கும். அவர் பிஜெபியில் தொடர்ந்தால் உள் கட்சித் தலைவர்களுடன் போராடுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். மேலும் அவர் அமைச்சராவதால் அவருக்கோ கட்சிக்கோ என்ன நன்மை?

#அண்ணாமலை #திமுக #தவெக #விஜய் #பாஜக

02/06/2026

ஜபர்தஸ்தான பேச்சுகளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!

"தூய அரசியல் மடிந்துவிட்டது": இது, அதிமுக MLA க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தது பற்றி அன்புமணி ராமதாஸ் பேசியது. அரசியலில் நேரத்திற்கு தகுந்த மாதிரி எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

முன்பு, பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி கேட்டு கட்சித் தலைமை பேரம் பேசியதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. அந்த செய்திக்கு பாமக தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் வந்ததில்லை.

விசிக ஒரு முடத்தெங்கு ஆ. ராசா பேச்சு. தவெகவின் ஆட்சி திமுகவின் தயவால்தான் நடைபெறுகிறது என்றும், அது அவர்களின் சொந்த பலத்தால் அமைந்த அரசு அல்ல என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக ஏன் தவெகவிற்கு தயவு காட்ட வேண்டும்? இடைத் தேர்தல் வந்தால் இருப்பதும் போய்விடும் என்ற பயத்தினாலா?

துரை வைகோ, மதிமுக MLA க்கள் துரதிர்ஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அதனால் தங்களால் தற்போதைய புதிய அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதாவது, வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் யோக்கியர்கள்தான். பாவம், விஜய்யை ஆதரிப்பதற்கு முடியவில்லை என்ற தனது ஆதங்கத்தை துரைவைகோ வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார்.

பதவியை எதிர்பார்த்து தவெகவை ஆதரிக்கவில்லை என்று பேசிய வேலுமணி & கோ, பிறகு எதற்காக தவெகவை ஆதரித்தது? பின்னர் மறுபடியும் ஏன் EPS இடம் சரண்டர் ஆனது என்று தெரியவில்லை. (தாய்வீடு போகிறார்களாம்!)

ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீமான், தற்போது நாம் தமிழர் கட்சியினர் விஜய்யை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். இந்த மாற்றம் எதனால் விளைந்தது என்று தெரியவில்லை!

ஒரு கழுதையில் அப்பா சவாரி செய்ய, மகன் நடந்து செல்கிறான். அதைப்பார்த்த ஒருவன் அப்பாவிடம் "சிறுவனை நடக்கவிட்டு நீ சவாரி செய்யலாமா?" என்று கேட்கிறார். பிறகு அப்பா கீழே இறங்கிவிட்டு மகனை கழுதையில் ஏற்றுகிறார்.

வருவோர் போவோர் பேச்சைக் கேட்டு இருவரும் கழுதை மீது பயணம் செய்கிறார்கள். இதைப் பார்த்த ஜீவகாருண்யமிக்க மனிதன் "கழுதையை இம்சை செய்யலாமா?" என்று விமர்சனம் செய்தான். போதுமடா சாமி, என்று தகப்பனும் மகனும் கழுதையைச் சுமந்தால், ஊரே கைகொட்டி "முட்டாள்கள்" என்று சிரித்ததாம்.

யாரும் விமர்சனம் பண்ண முடியாத அளவுக்கு ஒரு முடிவினை விஜய்யால் மட்டுமல்ல யாராலும் எடுக்க முடியாது. விஜய் தனக்கு பெரும்பான்மை இல்லை, மறுதேர்தலில் மக்களைச் சந்திக்கிறேன் என்று முடிவு செய்தாலும் விமர்சனங்கள் வரவே செய்யும்.

பின்னே? அதிமுக MLA க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் வரப்போகும் இடைத்தேர்தலில் திராவிடக் கட்சிகள் போட்டியிடுமா என்றே தெரியவில்லை. இதில் பொதுத்தேர்தல் என்றால் கூண்டோடு கைலாசம் என்பது உறுதி. ஆனாலும், ஆளாளுக்கு பேசும் ஜபர்தஸ்தான பேச்சுக்களுக்கு மட்டும் குறை ஒன்றுமில்லை...

Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!

02/06/2026

America Wants the World — But Does the World Need America Any Longer?

For America, it seems that one country is never enough. Its ambitions increasingly appear to extend across the entire globe. From oil-rich nations such as Canada, Mexico, and Venezuela to strategically important territories like Greenland, American influence seeks to reach far beyond its borders. Donald Trump's desire to bring the Panama Canal back under American control and Washington's long-standing interest in dominating key maritime chokepoints such as the Strait of Hormuz are examples of this larger vision.

In modern geopolitics, oil is not merely a source of energy; it is a source of power. Although the United States does not directly govern Iraq's oil fields or refineries, it exercises significant influence over Iraq's economy through financial and commercial mechanisms. Many observers believe that Washington seeks to establish similar leverage over Iran. The insistence that Middle Eastern oil be traded primarily in U.S. dollars is part of the same strategy.

America's interests do not stop there. It needs China's rare earth minerals, which are essential for advanced technology and defense industries. It benefits from India's vast pool of skilled yet relatively inexpensive labor. At the same time, countries such as India, Japan, South Korea, Ukraine, Australia, and many European and Middle Eastern nations represent major markets for American weapons manufacturers. The more unstable the world becomes, the more valuable these markets become.

Underlying all of this is a strategic calculation: control the world's energy resources and trade routes, and you gain enormous leverage over emerging powers such as China and India. It is a vision of global influence built on oil, finance, trade, and military strength.

Yet there is a reality that Washington may be underestimating. While America needs the world for its prosperity and influence, the world may not need America to the same extent. Nations are increasingly diversifying their trade, building regional alliances, and seeking alternatives to American dominance.

The rest of the world appears to be recognizing this shift. Whether America recognizes it remains an open question. Because still the USA is in denial mode.

Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!

02/06/2026

உரிமைத் தொகையைப் பெற்று எதை நாம் வாங்கினோம்?

மொபைல் ரீசார்ஜ்?
பிள்ளைகள் கல்விக் கட்டணம்?
சமையல் எரிவாயு?
வாகன எரிபொருள்?
மின் கட்டணம்?
ஜீவாதாரமான குடிநீர்?

இவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அரசு உதவித்தொகையோ அல்லது உரிமைத் (!) தொகையோ ஒரு முறை வருமா? மக்களின் வாழ்வாதாரங்களை இலவசங்கள் உயர்த்துமா? அது சம்பாத்தியத்தில்தான் உயர வேண்டும். அதற்கு வழிவகை செய்யவேண்டும். ஓட்டுப் போடுவதற்கு மக்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்று வாய்க்கரிசி போடுவதா அரசின் வேலை? சிந்தித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

உரிமைத்தொகை என்பது மக்கள் கேட்டதில்லை. அது கமலஹாசனின் ஐடியா. அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டது திமுக! மக்களிடம் ஓட்டுப்பெற நேரடியாக மக்கள் பணத்தையே வாரி இறைப்பது புது ஜனநாயக டெக்னிக். அதை பிற மாநிலங்களுக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது திமுக!

நாம் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிரி இல்லை. "இலவச அரிசி" என்பது யாரும் எந்த சூழ்நிலையிலும் பசியால் வாடக்கூடாது என்பதற்கான உன்னதமான திட்டம். ஆனால், சமூக அவலங்களை திரைபோட்டு மூடுவதுதான் இலவசங்களின் நோக்கம் என்பதே இடிக்கிறது. இதுவரை ஆண்ட திராவிட அரசுகள் இன்று பதவியேற்ற தவெக அரசின் தலையின் மீது ஏற்றி வைத்திருக்கும் கடன் சுமை சாதாரணமானதில்லை.

2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக (ரூ.10,62,248 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மொத்த வருவாயில், முந்தைய கடன்களுக்கான வட்டியாக மட்டும் சுமார் 15% வரை செலவாகும். கடனை அடைப்பது தனிக்கதை!

ஒரு பக்கம் கடனை அடைக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவேண்டும். அத்துடன் இலவசங்களையும் தொடர வேண்டும். திமுகவின் பொருளாதார திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரே ஒரு உதாரணம் போதும். 2021 தேர்தலில், ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக வாக்குறுதி அளித்தது. உதயநிதி ஸ்டாலின் மேடைதோறும் என்ன பேசினார் தெரியுமா?

"மக்களே உங்களுடைய நகைகளை (பணத்தேவை உள்ளதோ இல்லையோ!) கூட்டுறவு வங்கியில் அடகுவைத்து (கூச்சப்படாமல்?) கடன் வாங்குங்கள். அந்த கடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும்." மக்கள் மீதுதான் அவருக்கு எவ்வளவு கரிசனம் பாருங்கள்! என்ன நடந்தது தெரியுமா? பலர் கூட்டுறவு அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு கவரிங் நகைகளை வைத்து பணம் வாங்கினார்கள்.

பிறகு? எப்படியும் தேர்தல் முடிந்து கடன் தள்ளுபடி செய்யப்படும். நகையை தேர்தலுக்குப்பின் திரும்பித் தரப்போவதால், அதை வங்கி அதிகாரிகள் உரசிப் பார்க்க வேண்டாமே?இப்படிப்பட்டவர் துணை முதல்வராகி நாட்டினை ஆண்டால் நாடு தாங்குமா? கூட்டுறவுச் சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அது உதயநிதியின் நஷ்டமா, அல்லது நாட்டு மக்களின் நஷ்டமா? இது நமது சந்ததியினரின் தலையில் திமுக அரசு ஏற்றிய சுமை.

ஓட்டு கிடைத்தால் திமுக ஆட்சிக்கு வரலாம். ஒருவேளை அது கிடைக்காமல் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால்? நகைக் கடன்களை தள்ளுபடி செய்யச் சொல்லி அரசுக்கு எதிராகப் போராடலாமே! என்னே ஒரு ராஜதந்திரம்! இப்பேர்ப்பட்ட ஒரு கட்சியிடம் இருந்து தமிழகத்தின் தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் இல்லை; மக்களின், குறிப்பாக இளைஞர்களின் விழிப்புணர்ச்சியால் இது 2026 இல் நிகழ்ந்தது.

"பலரைச் சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது." என்பது அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழி ஆகும். இது மாறாத தத்துவம் என்பதால், தற்கால அரசியலில் இந்த சிந்தனை அப்படியே எதிரொலிக்கிறது.

கடன் ரத்து, இலவசங்கள், உதவித்தொகை ஆகியவை இருக்க வேண்டியதுதான், அது அரசின் வருவாய்க்குள் உள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்ற வருவாயை பெருக்குங்கள். மென்மேலும் கடன் வாங்குவது ஆபத்து. அதை ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்வது அவசியம். அரசு இந்த விஷச்சுழலில் இருந்து மாநிலத்தை விடுவிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சீண்டினாலும் தவெக அரசு இருக்கிற சிக்கலை அதிகமாக்கி விடக்கூடாது.

Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!

#திமுக #தவெக #விஜய் #ஸ்டாலின் #உதயநிதி #அரசியல் #2026தேர்தல் #உரிமைத்தொகை #இலவசங்கள்

01/06/2026

என்னது, போரை நிறுத்துறதா? அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் பாஸ்!

அமெரிக்காவால் ஒரு போரை சுலபமாக ஆரம்பித்து வைக்க முடியும். ஆனால் அதை முடித்து வைக்க முடியுமா என்றால் — வரலாறு சிரித்துக்கொண்டே “அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் பாஸ்!” என்று பதில் சொல்லும்.

ஒரு பக்கம் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போது கூச்சமே இல்லாமல் மறுபக்கம் ரகசியத் தாக்குதலையும் அது நடத்தும்! அது நம்பிக்கை துரோகம், அதை நம்பினால் நாசம். பிறகு போர் முடிந்த மாதிரிதான்!

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விசித்திரமானது. அதிரடியாக ஒரு போரை ஆரம்பிப்பதில் இருக்கும் அவசரம், அதை முடிப்பதில் இருக்காது. “சமாதானத்தை நிலைநாட்ட” அமெரிக்கா இறங்கும் போது, சம்பந்தப்பட்ட நாடுகள் “இதை விட போர் பரவாயில்லை!” என்ற மனநிலைக்கே வந்துவிடும்!

இப்போது ஈரான் பிரச்சினையிலும் அதே காட்சி. “சமாதானம் வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே, அதற்காக அமெரிக்கா ஈரானுக்குப் போடும் நிபந்தனைகள் ஒன்று, இரண்டு, மூன்று என நீண்டுகொண்டே போகிறது. இது கதவைத் திறக்க சாவி கேட்பது போல இல்லை; கதவை உடைத்துக்கொண்டே “பயப்பட வேண்டாம், அமைதி, அமைதி!” என்று சொல்வது போல இருக்கிறது.

அமெரிக்காவின் யோக ஜாதகமே அப்படி. போர் ஆரம்பிக்கும் போது ஹாலிவுட் ட்ரெய்லர் மாதிரி அமர்க்களமாக இருக்கும். ஆனால் முடியும் போது? “விட்டால் போதும்” என்று தலைதெறிக்கப் பின்வாங்கி ஓடிய வரலாறுதான் அதிகம். சமாதானம் என்பது போகாத ஊருக்கு வழி கேட்ட கதையாக முடியும்.

வியட்நாம் போர்:

கம்யூனிசத்தை தடுக்கச் சென்ற அமெரிக்கா, இறுதியில் தூதரகத்திலிருந்து அவசரம் அவசரமாக "ஆளைவிட்டால் போதும்" என ஹெலிகாப்டரில் வெளியேறியது. உலக அரசியலில் அது இன்னும் ஒரு அவமானச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. வியட்நாம் போர் அதிகாரப்பூர்வமாக 19 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 27 நாட்கள் நீடித்தது.

வளைகுடா (ஈராக்) போர்:

“மக்கள் காப்பாற்றப்படுவார்கள், ஜனநாயகம் மலரும்” என்று தொடங்கிய போர், பல ஆண்டுகள் குழப்பம், பயங்கரவாதம், அரசியல் சீர்கேடு ஆகியவற்றை விட்டுச் சென்றது.
செப்டம்பர் 22, 1980 இல் தொடங்கிய போர் ஆகஸ்ட் 20, 1988 இல் முடிந்தது.

ஆப்கானிஸ்தான் போர்:

இருபது ஆண்டுகள் போராடி, ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் செலவழித்து, இறுதியில் "சுபம்" என போர் முடிந்து அமெரிக்கா வெளியேறிய சுவடுகள் மறைவதற்குள் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். “Mission Accomplished” என்ற பதாகை வரலாற்றின் மிகப் பெரிய காமெடிகளில் ஒன்றாக மாறியது.

க்யூபா பிரச்னை:

இது நம்ம தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதையைப் போலத் தொடர்வது, அநுமார் வால் போல நீள்வது! க்யூபா கைவாக்கில் அருகிலேயே இருக்கும் ஒரு தீவு நாடு. ஆனால் பல தசாப்தங்களாக க்யூபாவை அமெரிக்காவினால் நினைத்தபடி ஒடுக்க முடியவில்லை. தடைகள், தடைச் சட்டங்கள், அரசியல் அழுத்தங்கள் — அனைத்தையும் பிரயோகித்துப் பார்த்தும், க்யூபா எதற்கும் மசியவில்லை.

இதற்கெல்லாம் மேலாக, “நடக்கிற போரை நான் நிறுத்திவிடுகிறேன் பார்!” என்று சொல்லிக்கொண்டு எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றும் திறமை அமெரிக்காவின் தனிச்சிறப்பு. உக்ரைன் போர் அதற்கொரு நல்ல உதாரணம். சமாதான பேச்சுகள் துவக்குமுன், மறைமுகமாக, முதலில் போருக்குத் தேவையான ஆயுதங்கள் பற்றிய பேச்சுக்கள் நடப்பது இங்கு வழக்கமானது.

அமெரிக்காவிற்கு நம்பிக்கை துரோகம் என்பது கைவந்த கலை! பத்தாக்குறைக்கு பவளக்கொடி என்பது போல, இப்போது அமெரிக்கா உலகின் பாதிக்கு மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தகப் போரிலும் இறங்கியுள்ளது. ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன், கனடா — சுருக்கமாகச் சொன்னால், யாருடனாவது சண்டை இல்லாதிருந்தால் அதுதான் ஆச்சரியம், செய்தி!

பிறகு?

“MAGA — Make America Great Again” என்றால் சும்மாவா? டிரம்புக்கு உலக சமாதானத்திற்கான நோபல் பிரைஸ் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. பாவம் அவரும் வாய்விட்டுக் கேட்டுப் பார்த்துவிட்டார். அய்யோ பாவம், பிரைஸ் இன்னும் கிடைத்த பாடில்லை...

யோசித்துப் பார்த்தால், MAGA வாவது மண்ணாவது? சில நேரங்களில் “Make America Fight Again” என்பதுதான் அமெரிக்க அதிபர்களின் முழுநேர வேலை போல, என்று நினைக்கத் தோன்றும்.

- o O o -

Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!

#அமெரிக்கா #அரசியல் #ஈரான்

Address

Chennai

Telephone

+19789494609

Website

Alerts

Be the first to know and let us send you an email when தென்தமிழகம் - ThenThamilagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share