13/05/2026
அனைவருக்கும் வணக்கம்
இன்று (13.05.2026 ) வாலாஜா அனந்தலை ஊராட்சியில் இயங்கி வரும் துளிர்கள் மனநலம் குன்றிய உண்டு உறைவிடப் பள்ளிக்கு நமது அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 10000 மதிப்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அதன் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், தொடர்ந்து ஆதரவளிப்போம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தோம்.
மேலும் அதன் நிர்வாகிகள் நமது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியையும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கி வரும் நமது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்.
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை இராணிப்பேட்டை